அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

ஆஸ்திரேலியாவில் கேபிள் கடற்கரையில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிம்பர்லி பிராந்தியத்தில் கேபிள் என்ற புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் அனைவரும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். அப்போது ஒருவர் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது சுறா மீன் ஒன்று அவரை கடுமையாக தாக்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு சுறாவிடம் ...

Read More »

அவுஸ்திரேலியில் மிக வேகமாகப் பரவும் கொரோனா!

தெற்கு அவுஸ்திரேலியாவில்  கொரோனாத் தொற்றுப்  பரவலைத்  தடுக்கும் வகையில் மிகக் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் (Adelaide) மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து அங்கு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு  பாடசாலைகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் போராட்டம்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள 65 அகதிகளுக்கு முறையான உரிமைகளை வழங்கக்கோரியும் அவர்களை விடுவிக்கக் கோரியும் நடந்த போராட்டதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, மற்றும் நவுரு ஆகிய தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல அகதிகள் சரியான சிகிச்சையின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவி வரும் இச்சூழலில், பொது ஒன்றுக்கூடலுக்கான ...

Read More »

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்!

அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவினர் ஆப்கானிஸ்தானில் 39 பொதுமக்களை கொலை செய்தனர் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை மூலம் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் முடிவை அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ளது. 57 சம்பவங்கள் தொடர்பில் 300க்கும் அதிகமானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. 25 படையினர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது குற்றங்களிற்கு உதவியுள்ளனர் என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. 2009 முதல் 2013 முதல் சிறைக்கைதிகள் விவசாயிகள் பொதுமக்களை கொலை செய்தமைக்காக 19 முன்னாள் ...

Read More »

3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்த ஆஸ்திரேலியா

பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க 3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் பிக் பாஷ் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை நடத்தி வருகிறது. பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடிக்கடி விதிமுறைகளை மாற்றம் செய்யும். கிரிக்கெட்டில் டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை தூக்கிப்போட்டு மேடா? பள்ளமா? எனக்கேட்கும் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த சீசனில் மூன்று முக்கிய மாற்றங்களை ...

Read More »

ஆஸ்திரேலியா : வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதில் தாமதம்

ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ள நிலையில், இது வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு திரும்புவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியாவின் வடக்கு பிரதேசத்திலும் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் சோதனை முயற்சியாக மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை இத்தாமதம் பாதிப்பை ஏற்படுத்தாது என பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியிருக்கிறார். கொரோனா சூழலுக்கு பிறகான 7 மாதக் காலத்தில் வெறும் 300 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் வந்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளினால் ...

Read More »

ஆஸி. சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் கோரன்டைனில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்றள்ள இந்திய அணி ...

Read More »

கணவன் புற்றுநோயால் மரணம், தஞ்சக் கோரிக்கையும் நிராகரிப்பு

இலங்கையிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர். ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார். எனினும் 2018ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராஜ் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் மரணமடைந்தார். புற்றுநோய் பாதிப்பிற்குள்ளானதால் தொடர்ந்தும் வேலை செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்ட ராஜ், வேலை விசாவிற்கான முக்கிய நிபந்தனையை பூர்த்திசெய்ய ...

Read More »

சிட்னியில் பாதுகாப்பான புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், பாதுகாப்பான முறையில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படவுள்ளன. டிசம்பர் 31ஆம் தேதியன்று, முன்னெப்போதும் இல்லாத வகையில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே நகர மையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். புத்தாண்டுக்கான வாணவேடிக்கை, இந்த ஆண்டு சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும். சிட்னி துறைமுகத்தைச் சுற்றிய பகுதிகளில் வாணவேடிக்கையைக் காண்பதற்கான சிறந்த இடங்கள், சுகாதார ஊழியர்களுக்கும் தீயணைப்பாளர்களுக்கும் ஒதுக்கப்படும்.

Read More »

மெல்போர்னில் ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கும் சமையல் கலைஞர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக உணவு கொடுத்து வருவது, பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆதரவற்றோருக்கு தமான் ஸ்ரீவஸ்தவ் என்ற 54 வயது நபர் செய்துவரும் உதவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய வம்சாவளி சமையல் கலைஞரான இவர், ஏழை எளிய மக்களுக்கு தினமும் இலவசமாக உணவு வினியோகித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், வீடற்ற மக்களுக்கு உணவு வழங்குவது இது புதிதல்ல. ஈராக்கில் வளைகுடா ...

Read More »