வலசைமுரசு

ஆஸ்திரேலியாவின் பிரபல ‘Spelling Bee’ ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.

Read More »

அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்!

பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல்  (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக  தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார். தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது கிறிக்கெட்பயிற்றுவிப்பாளரால் தன்னையும் அழைத்து வியையாடச் செய்தமையால் கிறிக்கெட்டில் பங்கேற்கும் சந்தர்பம்  ஏற்பட்டது என்றார். ...

Read More »

உலகின் தலைசிறந்த ஆசிரியராக அவுஸ்ரேலிய தமிழ் பெண்!

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.

Read More »

கங்காரு நாட்டில் சாதனை படைத் ஈழத்து மாணவன்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து, மாநிலத்தில் முதலாவதாக, செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் வந்திருக்கின்றார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன் – பத்மினி தம்பதியின் சிரேஷ்ட புதல்வனான ஹரிஷ்ணா, அவுஸ்திரேலியாவில் பிறந்து ஆரம்பக் கல்வி முதல் வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் மொழியைக் கற்றார். கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள இம்மாணவனின் பெறுபேறுகள், இன்று (12) வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களம், தொலைபேசியூடாகப் பெறுபேற்றை கடந்த வெள்ளிக்கிழமை (7) அறிவித்தபொழுது அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, ...

Read More »

மக்களின், மக்களால், மக்களுக்காக…

சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியாராமல், மக்கள்  ஒன்றிணைந்து தமது தேவைகளை தாமாகவே பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டன. அண்மையில் இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றியதும் இந்த வகையில் அடங்கும் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தன்னார்வ அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணையும் மக்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றாடல் போன்ற விடயங்களில், அரசாங்கத்தை பகைக்கா வண்ணம், தங்களைத் தாங்களே ...

Read More »

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள ஆஸ்திரேலியத் தமிழர்!

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் ...

Read More »

சிறந்த சமையலாளருக்கான போட்டியில் (Master Chef Australia) சசி செல்லையா வெற்றி!!

2018 ஆம் ஆண்டுக்கான ஆக சிங்கப்பூரில் பிறந்து தற்போது தென் அவுஸ்திரேலியாவில் வாழும் சசி செல்லையா வெற்றியடைந்துள்ளார். சிங்கப்பூரில் பிறந்த 39 வயதான சிவா அவுஸ்திரேலியாவுக்கு 2011 இல் குடி பெயர்ந்தார். தற்போது அடலெய்ட் நகரில் சிறை அதிகாரியாகப் பணியாற்றும் இவர் Master Chef Australia ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் முதற்தடவையாக 93 புள்ளிகளை அதிகூடிய புள்ளிகளாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆழ்கடல்கடந்த அவுஸ்திரேலியப் பயணம் (பகிர்வு)

மூன்று தசாப்தகாலமாக இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழ்மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த 2009-ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்களப்பேரினவாத அரசு உலக வல்லாதிக்கசக்திகளின் உதவியுடன் இரும்புக்கரம்கொண்டு அடக்கப்பட்டது. இதன் பிற்பாடு வடக்கு கிழக்குவாழ் தமிழ்மக்கள் சிங்களப்பேரினவாதசக்திகளாலும் அதன் கைக்கூலிகளாலும் பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கும் சொல்லொணாத்துன்ப துயரங்களுக்கும் முகம்கொடுத்துவருகின்றனர். இதன்விளைவாகவே குறிப்பாக 2009-ம்ஆண்டிற்குப்பின்னரான காலப்பகுதிகளில் இலங்கையிலிருந்து பல ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகளில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்தமை யாவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக 2011-ம் 2012-ம்ஆண்டுகளில் இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த படகுகள் தொடர்பான செய்திகளையும் அகதிகளை ...

Read More »

மறைந்து போகும் நம் அடையாளங்கள்!

ஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை,கலாச்சாரம்,பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஒவ்வொரு இனங்களும் தமதுஅடையாளங்களை நிலைநிறுத்துவதிலும் இவை அழிந்துபோகாமல் பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற வேளை தமிழர்களாகியநாம் எவ்வளவுதூரம் எமதுஅடையாளங்களுக்கு முதன்மையளிக்கின்றோம் ? அதை அழியாது காக்க எவ்வளவு முயல்கின்றோம் என்றால் அது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. தமிழனுக்கே உரித்தான நாடு ஒன்று இதுவரை இல்லை எனினும் உலகில் தமிழரில்லாத நாடுகள் இல்லை எனும் அளவிற்கு பரந்து வாழ்கின்ற இனமாக தமிழினம் ...

Read More »