திரைமுரசு

விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சில படங்களில் நாடக கலைஞராகவும் கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியிருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி தெருக்கூத்து ...

Read More »

மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி

சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார். பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை ...

Read More »

மும்பையில் ஜாலியாக வாக்கிங் செய்யும் சூர்யா – ஜோதிகா

மும்பை சிட்டியில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை அடுத்து சூர்யா நடிப்பில் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் உருவாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் அதிகாலையில் வாக்கிங் சென்றிருக்கிறார். இதை ரசிகர்கள் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ...

Read More »

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அடுத்த பரிணாமம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர் இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து ...

Read More »

உள்ளம் உருகுதய்யா… சூர்யா படத்தின் அடுத்த பாடல்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி…’ என்ற பாடல் ஏற்கனவே ...

Read More »

மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்

ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் என செல்வராகவன் பதிவு செய்துள்ளார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிவர் செல்வராகவன். தனுஷ் அண்ணாகிய செல்வராகவன் தற்போது ராக்கி பட இயக்குனரின் சாணிக்காகிதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் “ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து  விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு ...

Read More »

வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புகிறேன்

பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும், வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக ஹார்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 12-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். அவர், தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பது:- நான் ஒரு பணக்காரரை காதலிப்பதை விட வாழ்க்கையில் முன்னேற ...

Read More »

பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்

சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபனுக்கு தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா ...

Read More »

யாரும் நம்ப வேண்டாம்… அபர்ணா பாலமுரளி கோபம்

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வந்தார். 8 தோட்டாக்கள் படத்திலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் நடிகர்- ...

Read More »

மகளுக்காக புதிய முடிவு எடுத்த ஸ்ரேயா

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, தனது மகள் ராதாவுக்காக புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன. எனது மகள் ராதா என் படங்களைப் பார்த்து பெருமைப்படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். நான் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இருபது ...

Read More »