ஆஸி. சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் கோரன்டைனில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கினர். இது தொடர்பான படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது.
பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

ஆஸ்திரேலியா சென்றள்ள இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் ஒரு நாள் தொடரில் மட்டும் 1992-ம் ஆண்டில் இந்திய அணி அணிந்து விளையாடிய அதே வடிவமைப்புடன் கூடிய ஜெர்சியை இம்முறையும் இந்திய வீரர்கள் அணிய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.