செய்திமுரசு

ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியது சிஎன்என்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் குறித்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கிண்டலாக பேசியதற்கு, சிஎன்என் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸில் உள்ள கேரியர் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின்போது, செய்தியாளர் சூசேன் மால்வியக்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் டொனால்டு ட்ரம்ப்பை கிண்டல் செய்யும் விதமாக பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமான கருத்துக்காக ட்ரம்ப் குழுவிடம் மன்னிப்பு கோருகிறாம்’ என, சிஎன்என் நிறுவனம் அறிவித்துள்ளது. ...

Read More »

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மித் சதத்தால் 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா. அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியா  மண்ணில் இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி ரன் கணக்கை துவக்காமல் வெளியேறினார். வார்னர் 24 ரன்கள் சேர்த்தார். ...

Read More »

அவுஸ்ரேலியா-நியூஸிலாந்து இன்று சிட்னியில் பலப்பரீட்சை

வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் சேப்பல்-ஹெட்லி ஒரு நாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் சிட்னியில் இன்று நடை பெறுகிறது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு இந்த ஆட்டம் நடக் கிறது. கடந்த ஆண்டு நடபெற்ற சேப்பல்-ஹெட்லி தொடரை நியூஸிலாந்து அணி 2-1 என வென்றிருந்தது. சமீபத்தில் பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை ...

Read More »

அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பெண் தலைமை நீதிபதி நியமனம்

அவுஸ்ரேலியா உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக ஒரு பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சூசன் கீபெல் ஆவார். அவர் 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். பின்னர் தன் முயற்சியால் பள்ளிப்படிப்பை பகுதி நேர படிப்பாக படித்து தேறினார். தொடர்ந்து சட்டம் படித்தார். அப்போது வக்கீல் குமாஸ்தாவாகவும் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். குயின்ஸ்லாந்தில் 1987-ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு மாகாண உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனார். மறு ஆண்டில் பெடரல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது அவுஸ்ரேலிய ஐகோர்ட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ன் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இரண்டு மணிநேரத்துக்கான பஸ், Tram மற்றும் தொடரூந்துப் பயணங்களுக்கான Myki கட்டணம் 20 சதங்களால் அதிகரித்து $4.10 ஆக அறவிடப்படும் என்றும், அதேபோல் முழு நாட்களுக்குமான கட்டணம் $8.20 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க வருடாந்த adult Myki pass கட்டணம் 80 டொலர்களால் அதிகரிக்கப்படுகின்றது. அதேநேரம் concession ticket கட்டணம் 10 சதங்களால் அதிகரித்து $2.05 ஆக மாற்றமடைந்துள்ள அதேவேளை 5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வழக்கத்திற்கு மாறான வானிலை

அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையில் வழக்கத்திற்கு மாறான வானிலை நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வருகின்றன. 6,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்களும், டென்னிஸ் பந்து அளவுக்குப் பெரிதான ஆலங்கட்டிகளும் அந்த நிகழ்வுகளில் அடங்கும். குவீன்ஸ்லந்தை அந்த விநோத நிகழ்வுகள் உலுக்கின. அவுஸ்ரேலிய வானிலை ஆய்வகம் அதனால் எச்சரிக்கை விடுக்க நேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மோசமான வானிலை நிலவி வருகிறது. புதன்கிழமையன்று பெண் ஒருவர் மின்னலால் தாக்கப்பட்டதாகவும் பதின்ம வயதைக் கொண்ட ஒருவர் மரம் விழுந்து காயமடைந்ததாகவும் ABC News செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட ...

Read More »

அவுஸ்திரேலிய பப்புவா நியுகினி தடுப்பு முகாமில் மாவீரர் நாள் நிகழ்வு

அவுஸ்திரேலிய அரசால் பப்புவா நியுகினி  தீவில் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டுள்ளார்கள். மிகவும் நெருக்கடியான சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலர் விடுதலை போராட்டத்தில் மரணித்துள்ளதாகவும் அவர்களை நினைவுகூருகின்ற சந்தர்ப்பம் கிடைத்தமை நல்ல விடயம் எனவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாக தமது ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 – 11 – 2016 அன்று தாயக நேரப்படி மாலை ஆறு மணிக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஐந்து மாநிலங்களிலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் 2016

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், பிரிஸ்பன், அடேலையிட், மெல்பேர்ண் பெருநகரங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர். சிட்னியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் ஜபார் கலந்து சிறப்புரையாற்றினார். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இம்முறை எழுச்சியுடன் சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நினைவெழுச்சிநாள் – 2016 – ஒஸ்ரேலியா- மெல்பேர்ண் தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் தமிழீழ மாவீரர்நாள்- 2016 நிகழ்வுகள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ...

Read More »

இந்தியாவில் உலகின் ’மிகப்பெரிய வழிபாட்டிடம்’

டெல்லியிலிருந்து தென்கிழக் கே 140 கிமீ தூரத்தில் இருக்கும் வி்ருந்தாவனில், உலகின் மிக உயரமான மத வழிபாட்டிடம் ஒன்றை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த கோயில் 5.5 ஏக்கர் பரப்பளவில் 700 அடி (213 மீ) உயரத்தில் அமையவுள்ளது; “விருந்தாவன் சந்திரோதயக் கோயில்” என்று கருதப்படும் இந்த கோயில் உலகின் மிக உயர்ந்த இந்துக் கோவிலாக இருக்கும் என கருதப்படுகிறது. வத்திக்கானில் இருக்கும் செயிண்ட் பீட்டர்ஸ் பெசிலிக்கா மற்றும் எகிப்தில் இருக்கும் பிரமிடை காட்டிலும் இது பெரியதாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிகப் பிரபலமான ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஷர்ஜீல் கான், மொகமது ரிஸ்வான் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் ...

Read More »