செய்திமுரசு

மெல்பேர்ன்- விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் உட்பட விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய  தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்பட்டியலில் கடந்த வருடமிருந்த 234411 Geologist,  234412 Geophysicist ஆகியன Victorian Visa Nomination Occupation Listsஇலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விக்டோரியா மாநிலத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு குடிபெயர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

Read More »

சோ ராமசாமி காலமானார்

தமிழகத்தின் மூத்த பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82. இந்திய நேரப்படி இன்று(6) அதிகாலை அவர் காலமானதாகத் தமிழக  ஊடகங்கள் தெரிவித்தன. வழக்கறிஞரான திரு. சோ, பன்முகத் திறன் கொண்டவராகப் புகழ் பெற்றவர். சிறந்த அரசியல் விமர்சகரான அவர், காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராகவும், ஆலோசகாராகவும் திகழ்ந்தார். தமிழ்த் திரையுலகில் தனது நகைச்சுவை ஆற்றலால் தடம்பதித்தவர் அவர். சில திரைப்படங்களையும்  இயக்கியுள்ளார். 1999ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தின்  மாநிலங்களவை உறுப்பின‎ராகத் . ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரில், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அடிலெய்ட் விமான நிலையத்தில், அவர்கள் இருவரும், சுமார் 520 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலரைக் கொண்டு சென்றபோது, பிடிபட்டனர். அவர்களில் ஒருவரின் பயணப் பையில் 250 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் இருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து, மற்றோர் ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.அவரின் பயணப் பையில், சுமார் 270 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலர் இருந்தது தெரிய வந்தது. அவர்களைப் பிடிப்பதற்கு, போலீஸ் மோப்ப நாய் Utana, பேருதவியாக இருந்ததாய், அதிகாரிகள் கூறினர். ...

Read More »

அவுஸ்ரேலியா பல்கலைக் கழகத்தில் மிரட்டல்

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக் கழகத்தில், வன்முறைச் சம்பவம் பற்றிய மிரட்டல் விடுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, பல்கலைக் கழக வளாகத்தின் சில கட்டடங்களில் இருந்து, மாணவர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். Victoria மாநிலத்தில் உள்ள, அந்தப் பல்கலைக் கழகத்தில் போலீசார் பாதுகாப்புச் சோதனை நடத்தினர். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் பல்கலைக் கழகம் கூறியது. சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவிலும், அதன் அண்டை நாடான நியூசிலந்திலும் உள்ள பள்ளிகளுக்கு, வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அண்மை மிரட்டல் விடுக்கப்பட்டது.

Read More »

அதிக சதங்கள் நொறுக்கியஅவுஸ்ரேலிய வீரர்

ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார். *அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த ஆண்டில் 22 ஆட்டங்களில் விளையாடி 6 சதம், 4 அரைசதம் உள்பட 1,232 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக சதங்கள் நொறுக்கிய அவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ரிக்கிபாண்டிங் (இரண்டு முறை 2003, 2007-ம் ஆண்டு), மேத்யூ ஹைடன் (2007) ஆகியோர் ஒரு ஆண்டில் ...

Read More »

சக வீரரை விமர்சித்த அவுஸ்ரேலிய ஆல்–ரவுண்டர் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான மேக்ஸ்வெல் சமீபகாலமாக பேட்டிங்கில் ஜொலிக்காததால் அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அடுத்து நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான அவுஸ்ரேலியா அணிக்கு மேக்ஸ்வெல் அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மேக்ஸ்வெல் அளித்த ஒரு பேட்டியில், ‘ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா அணிக்காக விளையாடுகையில் கப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட்டுக்கு பிறகு தான் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக விக்கெட் கீப்பர்கள் பின் வரிசையில் ...

Read More »

ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது- ரிச்சர்டு பீலே

முதலமைச்சரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், நேற்று மாலை திடீரென முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதன்பின்னர் மீண்டும் தீவிர ...

Read More »

வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை

வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் ஊழியர் தொழிற்சங்கத்தின் 6 ஆவது பேராளர் மாநாட்டு அண்மையில் இடம்பெற்றது. இதில்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவிககையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவி்க்கையில், பலமுறை நான் ஊடகவியாளர்கள் பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பும் போது எம்மை விட்டுப்பிரிந்த ஊடகவியாளர்கள் தொடர்பாக மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். ...

Read More »

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து சிக்கலாக இருப்பதாகவும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் சென்னை அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதை அப்போலோ மருத்துவமனை செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஓர் அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் நிலை தொடர்ந்து சிக்கலாக இருக்கிறது. அவருக்கு எக்மோ கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவின் அதிசய பவளப்பாறைகள் பாதிக்கப்பட்டுள்ளது

உலகின் மிகவும் அற்புதமான இயற்கை அதிசயங்களில் அவுஸ்ரேலியாவின் கிரேட் பாரியர் ரீஃபும் ஒன்று. கடலுக்கு அடியில் அதன் நிறமும், சுற்றியுள்ள உயிரினங்களும் கண்ணைக்கவரும். ஆனால் இதுவரை இல்லாத வகையில் அது பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வு முடிவுவொன்று கூறுகிறது. நீரின் வெப்பம் உயர்வதால் சில பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு பவளப்பாறைகள் அங்கு அழிந்துள்ளன. விஞ்ஞானிகளுடன் சென்று நீருக்கு அடியில் இருக்கும் நிலையை பார்க்க பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு கிடைத்தது. விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், இவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவது கடினம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Read More »