அவுஸ்ரேலியாவில் சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு

அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரில், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அடிலெய்ட் விமான நிலையத்தில், அவர்கள் இருவரும், சுமார் 520 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலரைக் கொண்டு சென்றபோது, பிடிபட்டனர்.

அவர்களில் ஒருவரின் பயணப் பையில் 250 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் இருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, மற்றோர் ஆடவர் அடையாளம் காணப்பட்டார்.அவரின் பயணப் பையில், சுமார் 270 ஆயிரம் அவுஸ்ரேலிய டாலர் இருந்தது தெரிய வந்தது.

அவர்களைப் பிடிப்பதற்கு, போலீஸ் மோப்ப நாய் Utana, பேருதவியாக இருந்ததாய், அதிகாரிகள் கூறினர்.

அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியேறும் பயணிகள், பத்தாயிரம் அவுஸ்ரேலிய டாலர் அல்லது, அதற்கு ஈடான தொகையை வைத்திருந்தால், அது பற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும் என்பது பயணிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.