திரைமுரசு

சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்

சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு  தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. காவல்துறை வந்து பார்த்தபோது கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.காவல்துறை வந்து தள்ளியதும் திறந்துவிட்டது. இறப்பதற்கு முன்பு சபர்ணா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அதை வெளியிடவில்லை. காவல்துறை சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இவரது மரணம் தற்கொலையா கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More »

அஜித்குமாரின் ஏகே57

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித்குமாரும், இயக்குநர் சிவாவும் மீண்டும் இணைந்துள்ள படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அந்தப் படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை என்பதாலும், அது அஜித்தின் 57-வது படம் என்பதாலும் ஏகே57 என்று குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். ஏகே57 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடந்தது. இதனை தொடர்ந்து படத்தின் ...

Read More »

கமல்ஹாசனை கௌரவப்படுத்திய மதன் கார்க்கி

பாடலாசிரியர் மதன் கார்க்கி டூப்பாடூ என்ற இசை யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவர் 1977ம் ஆண்டு நடித்த கோகிலா என்ற படத்தின் காட்சிகளுக்கு புதிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார் கார்க்கி. இதற்கு அணில் ஸ்ரீனிவாசன் இசை அமைத்துள்ளார். “காதல் நொடியே அசையாதே…” என்ற இந்த பாடலின் பின்னணியில் கோகிலா படத்தில் கமலும், ஷோபாவும் இணைந்து நடித்த காட்சிகள் இடம் பெறுகிறது. “உலகநாயகன் கமல் ஹாசனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பாடல் காதல் நொடியே. நாம் அனைவரும் கமல் சாரை பல ...

Read More »

சொல்ல விரும்பிய கதை!- இயக்குநர் சந்திரா நேர்காணல்

வாழ்க்கையின் நிழல் படிந்த சிறுகதைகள் எழுதுபவர், முன்னாள் பத்திரிகையாளர், விளிம்பு நிலை மக்கள் பாதிப்புறும்போதெல்லாம் நியாயம் பேசும் அறக்குரலுக்கு சொந்தக்காரர் சந்திரா. ‘கள்ளன்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு மழை மதியத்தில் அவருடனான உரையாடல். ‘ஆண் சூழ் உலகு’ ஆகவே இருக் கிற சினிமா உலகம், உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது? கலையுலகத்துக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசம் எல் லாம் கிடையாது என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு ஆண் ஒரு தடவை தட்டினால் திறக்கும் சினிமா உலகக் கதவு, ஒரு பெண் பத்து ...

Read More »

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நாளை தொடங்கி, 11-ந் திகதி வரை 3 நாட்கள் நடக்கிறது.சென்னையில், சர்வதேச திரைப்பட விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி, 11-ந் திகதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சர்வதேச தமிழ் பிலிம் அகடமி மற்றும் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் இணைந்து இந்த பட விழாவை நடத்துகிறார்கள். தொடக்க விழா, நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சத்யம் தியேட்டரில் நடக்கிறது. தொடக்க விழாவில், ஜெர்மனியில் தயாரான ‘ஆர்ட் கேர்ள்ஸ்’ என்ற படம் திரையிடப்படுகிறது. அந்த படத்தின் ...

Read More »

தெறி சாதனையை முறியடித்த பைரவா..!

விஜய்யின் ‘பைரவா’ பட டீசர் யூடியுபில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், தெறி படத்தின் டீசரை முறியடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது. விஜய்யின் 60- வது படமான ‘பைரவா’ படத்தின் டீசர் யூடியுபில் வெளியிடப்பட்டு ஒரு வாரத்தில் 7 மில்லியன் பார்வைகளை பெற்றது. அதாவது 74,08,914 பார்வைகள். 2,08,926 லைக் பெற்றுள்ளது. இதன் மூலம் ‘தெறி’யின் சாதனையை பைரவா முறியடித்துவிட்டதாக கருதப்படுகிறது. பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவரும் ‘பைரவா’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ...

Read More »

கண்ணீர் துளிகளை தெறிக்கு வைக்கும் ராதிகா பிரசித்தா

பிரம்மா இயக்கிய படம் குற்றம் கடிதல். பள்ளி ஆசிரியை-மாணவன் சம்பந்தப்பட்ட கதையில் உருவான அந்த படம் கமர்சியல்ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை. என்றபோதும், தரமான பட பட்டியலில் சேர்ந்தது. அந்த படத்தில் நடித்த ராதிகா பிரசித்தா அதன்பிறகு விஜய்மில்டன் இயக்கியுள்ள கடுகு படத்தில் டைரக்டர் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கும் நார்மலான தோற்றம் கொண்ட ஒரு நடிகைதான் வேண்டும் என்று பல நடிகைகளை பரிசீலித்து இறுதியாக ராதிகா பிரசித்தாவை செலக்ட் பண்ணினார் விஜய்மில்டன். மேலும், இந்த படத்திலும் ராதிகா பிரசித்தாவுக்கு டீச்சர் வேடம்தான். ...

Read More »

ராணுவ வீரர்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் எழுதிய கவிதை

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான். ‘‘எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்; இருந்தாலும் தீபாவளிப் பரிசாக இதை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்’’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் இந்த ஆங்கிலக் கவிதையை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். ‘‘நமது பாதங்கள் தரை விரிப்பில் அவர்கள் பாதங்களோ  தரையில்   நமது நாட்கள் வலிமையானவை அவர்களுடையது சவாலானவை   நமது இரவுகள் ஆசீர்வதிக்கப்பட்டவை அவர்களுடையது பதற்றமானவை   நமது வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களுடையது கொடுப்பதற்கு   இந்தக் கதாநாயகர்கள் பாடப்படாமல் மறக்கப்படக் கூடியவர்கள் கிடையாது அவர்கள் மன வலிமையை தினச் சிக்கலை ...

Read More »

சமூகப்பொறுப்புள்ள இயக்குநர் பவன்குமார்

கிரௌட் பண்டிங் என்ற புதிய முயற்சியில் பலரிடம் பணம் வசூலித்து கன்னடத்தில் லூசியா என் படத்தை இயக்கியவர் கன்னட இயக்குநர் பவன்குமார். இந்திய அளவில் சினிமாத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சித்தார்த் நடிக்க எனக்குள் ஒருவன் என்ற பெயரில் இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. லூசியா படத்தை அடுத்து பவன்குமார் இயக்கிய யு டர்ன் என்ற படமும் வெற்றியைப் பெற்றது. விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய பாராட்டுக்களைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ...

Read More »

‘அச்சம் என்பது மடமையடா’ – நவம்பர் 11 வெளியீடு

சிம்பு நயாகனாக நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’, இம்மாதம் 11ம் தேதி வெளியாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என படக்குழு முன்பு தெரிவித்தபோதும் படம் வெளியாகவில்லை. அப்போது கெளதம் மேனன் – சிம்பு இருவருக்குமான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது . தணிக்கை பணிகள் சில தினங்களில் முடிவடையும் என்றும் அதனைத் தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி வெளியாகும் என்றும் ...

Read More »