கண்ணீர் துளிகளை தெறிக்கு வைக்கும் ராதிகா பிரசித்தா

பிரம்மா இயக்கிய படம் குற்றம் கடிதல். பள்ளி ஆசிரியை-மாணவன் சம்பந்தப்பட்ட கதையில் உருவான அந்த படம் கமர்சியல்ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை. என்றபோதும், தரமான பட பட்டியலில் சேர்ந்தது.

அந்த படத்தில் நடித்த ராதிகா பிரசித்தா அதன்பிறகு விஜய்மில்டன் இயக்கியுள்ள கடுகு படத்தில் டைரக்டர் ராஜகுமாரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கும் நார்மலான தோற்றம் கொண்ட ஒரு நடிகைதான் வேண்டும் என்று பல நடிகைகளை பரிசீலித்து இறுதியாக ராதிகா பிரசித்தாவை செலக்ட் பண்ணினார் விஜய்மில்டன்.

மேலும், இந்த படத்திலும் ராதிகா பிரசித்தாவுக்கு டீச்சர் வேடம்தான். ஆனால் புலிவேசக்காரராக நடிக்கும் ராஜகுமாரனை நேசித்து திருமணம் செய்து கொள்வாராம்.

அந்த வகையில், அவரது கேரக்டர் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே நடித்த குற்றம் கடிதல் படத்தில் தான் அடித்ததால் சிறுவன் இறந்தபோது, எவ்வளவு துடிதுடித்தபடி நடித்தாரோ அதற்கு ஒரு படிமேலே சென்று இந்த படத்தில் எமோசனல் பர்பாமென்ஸ் கொடுத்துள்ளாராம் ராதிகா.

சில காட்சிகளில் அவரது நடிப்பு படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் துளிகளை தெறிக்க வைக்கும் என்கிறார்கள்.