சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம்

சின்னத்திரை நடிகை சபர்ணாவின் உடல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளது. மதுரவாயலிலுள்ள அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு  தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறை வந்து பார்த்தபோது கதவு வெறுமனே சாத்தப்பட்டிருந்தது.காவல்துறை வந்து தள்ளியதும் திறந்துவிட்டது.

இறப்பதற்கு முன்பு சபர்ணா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அதை வெளியிடவில்லை.

காவல்துறை சபர்ணாவின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இவரது மரணம் தற்கொலையா கொலையா என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.