Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி கொரொனா தொற்றாளர் கள் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ரிசாத்தின் சகோதரருக்கு பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்புகள் இல்லையாம்!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் பதியுதீனிற்கு பயங்கரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என விசாரணைகளின் பின்னர் உறுதியான பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார் என உள்நாட்டுபாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ரியாட் பதியுதீனின் விடுதலை குறித்து கேள்விஎழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொலிஸார் இது குறித்து வழங்கியுள்ள அறிக்கை முரணாணதாக காணப்படுகின்றது என தெரிவித்து விளக்கம் கோரினார். இதற்கு பதிலளித்த சமல்ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கைமாணவி விபத்தின் மூலம் உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு பத்து வருட சிறை

அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் இலங்கை மாணவி விபத்தின் காரணமாக உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மொனால் பல்கலைகழகத்தில் கல்விகற்ற நிசாலி பெரேரா வெலிங்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இன்றைய நீதிமன்ற அமர்வில் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லிஸ் கையினர் விபத்துக்கு காரணமான சேன் கொச்ரனே என்ற நபர் நிசாலியின் குடும்பத்தை நிரந்தரமாக சிதைத்துவிட்டார் என தெரிவித்துள்ளார். மிகவும் நேசிக்கப்பட்ட ஒரேயொரு மகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள் என சேன் ...

Read More »

நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்வு!

நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடடுப்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் பயணத்தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளதன் காரணமாக பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

நியுசிலாந்தில் சமூகத் தொற்று இல்லை : பிரதமர் ஜெசிந்தா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டுள்ளதாக நியுசிலாந்து பிரதமர் Jacinda Ardern தெரிவித்துள்ளார். நியுசிலாந்து பிரதமர் அலுவலகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்தில் கடந்த 102 நாட்களுக்குள் சமூகத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More »

20வது அரசமைப்பு திருத்தச் சட்டம் தமிழ் மக்களை அழித்தொழிக்கும்!

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர் அந்தவகையில் மூன்றாவது வாரத்தில் ஐ.நா மனித ...

Read More »

20ஆம் திருத்தச் சட்டமூல மனுக்கள் மீதான பரிசீலனை இன்று

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த மனுக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த மனுக்கள் மீதான 4ஆம் நாள் பரிசீலனை நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன. குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்ரூ , ப்ரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், பரிசீலனைக்கு ...

Read More »

பெண் பத்திரிகையாளர்தனக்குதானேதீ மூட்டிஉயிரிழப்பு

ரஸ்ய பத்திரிகையாளர்ஒருவர்அந்தநாட்டின் உள்துறைஅமைச்சகத்தின் முன்னாள் தனக்குதானேதீ மூட்டிஉயிரிழந்தசம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பெண் பத்திரிகையாளர்ஒருவரே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். தனது வீட்டினை காவல் துறை சோதனையிட்டமறுநாள் அந்தபத்திரிகையாளர்உள்துறைஅமைச்சின் பிராந்தியஅலுவலகத்தின் முன்னாள் தனக்குதானே தீமூட்டி உயிரிழந்துள்ளார். தனக்குதானேதீமூட்டுவதற்குமுன்னாள் இரினா ஸ்லவேனியா என்ற அந்த பத்திரிகையாளர் எனதுமரணத்துக்கு ரஸ்யாவேகாரணம் எனதெரிவியுங்கள் எனமுகநூலில் எழுதியுள்ளார். தணிக்கைஅழுத்தங்களுக்குஎதிராககுரல் கொடுக்கும் பத்திரிகையொன்றில் பணியாற்றியபெண் பத்திரிiகாயாளரே இவ்வாறுதற்கொலைசெய்துகொண்டுள்ளார். நேற்றுஅவர் காவல் துறை தனதுவீட்டினைசோதனையிட்டனர்எனமுகநூலில் பதவிட்டிருந்தார். தன்னுடைய தனதுகுடும்பத்தவர்களுடையமடிக்கணிணிகள் உட்படஅனைத்தையும் பொலிஸார் கைப்பற்றினார்கள் எனஅவர்பதிவிட்டிருந்தார். இதேவேளை ஸ்லவேனியாஅரசாங்கத்தினால் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார் என எதிர்கட்சிதெரிவித்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டதாகக் கருதப்படும்  குகை ஓவியங்களை அந் நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாராடைல் மலைப்பகுதியில் ஆய்வு செய்தபோதே 572 ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கங்காரு, கடல் பசு மற்றும் சிபிலிஸ் எனப்படும் மிகச்சிறிய எலி இனம் போன்றவை தத்ரூபமாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாலிவாவா குகை ஓவியங்கள் எனப்படும் இவ்வகை ஓவியங்களை அவுஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களான அபாரிஜின்கள் வரைந்ததாகவும், இவை சுமார் 6000முதல் 9400 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்டவையாக  இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

மினுவங்கொட , திவுலபிடிய பகுதிகளில்ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட மற்றும் திவுலபிடிய காவல் துறை  பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் மீள் அறிவித்தல் வரை காவல் துறை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொரு வருக்கு கோவிட்- 19 வைரஸ் தொற்றுதியானதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More »