Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.                   பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ்  தன்னுடைய வணிக ...

Read More »

இலவச வீசா முறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க நடவடிக்கை!

இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ...

Read More »

உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது!

மக்களை குணப்படுத்த வேண்டும் என எண்ணிய மருத்துவர் சயத் மிர்வாஸ் ரோஹனியால் உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது. தாலிபான் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து தப்பி வந்த இந்த இளம் ஆப்கானிய மருத்துவர், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையில் சிக்கி தனது 32 வயதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ரோஹனி மரணம் தொடர்பான விசாரணை மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே உள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார் இக்குடும்ப வழக்கறிஞரான ...

Read More »

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும்!

செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி அளவில் கண் பார்வை இழப்புகள் ஏற்படுகின்றன. இது சர்வதேச அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கிறது. இதை சரி செய்யும் ஆய்வில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண் பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க வீதியில் இறங்கிய கோலா கரடி!

அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர் மரங்களை சாம்பலாக்கியுள்ளது. இதன் காரணமாக, அடிலெய்ட் பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பச் சுழல் நிலவுகிறது. கடும் வெப்பம் காரணமாக, காட்டில் உள்ள கோலா கரடிகள் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி வரும் கோலா கரடியைப் பலரும் அரவணைத்து தண்ணீர் வழங்கி வருகிறார்கள். ஜேன் ப்ரிஸ்டர் என்னும் விலங்கு நல ஆர்வலர், காட்டுத்தீ சம்பவத்தின்போது, தன் ...

Read More »

பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க முயல்கின்றது இந்த அரசு !

பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க இந்த அரசு  முயல்வதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாட கூடாது என தெரிவித்துள்ளமையானது கவலை அளிக்கின்றது. இவ்விடயத்தில் பலரும் கவலை அடைந்துள்ளனர். இதற்காக தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸலிம் மக்களும், மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த ...

Read More »

கரையொதுங்கிய படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 5 மனித உடல்களும் 2 மனித தலைகளும்!

வடகொரியாவிலிருந்து ஜப்பானிற்கு வந்த படகிலிருந்து ஐந்து உடல்களை மீட்டுள்ளதாக ஜப்பானின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் சடோ தீவில் கரையொதுங்கிய மரப்படகிலிருந்து  இந்த உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து உடல்களையும் இரண்டு தலைகளையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட படகில் கொரிய மொழியில் எழுதப்பட்ட இலக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட தீவில் கடந்த மாதத்தில் மர்ம படகு கரையொதுங்குவது இது இரண்டாவது தடவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More »

நியூஸிலாந்துக்கு எதிராக 467 ஓட்டங்களை குவித்த ஆஸி.!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ...

Read More »

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல் துறை அதிபராக நுவன் வேத சிங்க!

பிரதி காவல் துறை  மா அதிபர் நுவன் வேதசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி காவல் துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

கழன்று போகும் கடிவாளம்!

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் ...

Read More »