கரையொதுங்கிய படகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 5 மனித உடல்களும் 2 மனித தலைகளும்!

வடகொரியாவிலிருந்து ஜப்பானிற்கு வந்த படகிலிருந்து ஐந்து உடல்களை மீட்டுள்ளதாக ஜப்பானின் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் சடோ தீவில் கரையொதுங்கிய மரப்படகிலிருந்து  இந்த உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐந்து உடல்களையும் இரண்டு தலைகளையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படகில் கொரிய மொழியில் எழுதப்பட்ட இலக்கங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட தீவில் கடந்த மாதத்தில் மர்ம படகு கரையொதுங்குவது இது இரண்டாவது தடவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.