கொட்டுமுரசு

நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் திபெத்

## சீனாவின் திபெத் சுயாட்சி பிராந்தியம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான சமாதானரீதியான விடுதலையின் 70 வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், அபிவிருத்தியில் துள்ளிப்பாய்ந்த பல தசாப்தங்களுக்கு பிறகு புதிய நவீனமயமாக்கத்தை தொடங்குகிறது ; ## ஒரு சில தசாப்தங்களில், முனனென்றும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைச் செய்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் உள்ள சகல இனக்குழுமங்களையும் ஐக்கியப்படுத்தி தலைமைதாங்கியிருக்கிறது ; ## ஐக்கியப்பட்ட, சுபிட்சம் நிறைந்ந, கலாசார ரீதியில் மேம்பட்ட, ஒத்திசைவுடைய, அழகான புதிய நவீன சோசலிச திபெத்தை கட்டியெழுப்புவதற்கு ...

Read More »

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?

பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்பு?கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்தக் கேள்விகளை அரசியல் வட்டாரங்களில் எழுப்பி யிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப் பதற்காக அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் பசில் ராஜபக்‌ச நியமிக்கப் பட்டிருக்கின்றார். அதே வேளையில் பேச்சுக்களுக்கு முன்னோடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்துப் பேசியிருக்கின்றார். இவை எல்லாம் பகிரங்கப் படுத்தப்படாமல் இரகசியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், தகவல்கள் இப்போது கசிந்திருக்கின்றது. பசிலுடன் பேசுவதற்குத் தயாராகும் கூட்டமைப்புதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பு ...

Read More »

காபுல் விமானநிலையத்திலிருந்து பெரும் குழப்பத்திற்கு மத்தியில் நான் எவ்வாறு தப்பினேன்?

தலிபான் காபுலை கைப்பற்றிய தினம், ஜேர்மனியிலிருந்து நண்பர் ஒருவரின் தொலைபேசி அழைப்புடன் ஆரம்பமானது. ஜேர்மன் தூதுரகத்தின் பணியாளர்களுடன் அந்த நாட்டின் விமானமொன்று புறப்படவுள்ளதால் என்னை விமானநிலையத்திற்கு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆப்கானிலிருந்து ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்படவேண்டியவர்களின் பட்டியலில் அவர் எனது பெயரை பதிவு செய்தார்.நான் ஜேர்மன் ஊடகத்திற்காக பணியாற்றியிருந்தேன்.கடந்த ஒரு வருடகாலமாக நான் விசாவை பெறுவற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன. எனக்கு சிந்திப்பதற்கான நேரம் இருக்கவில்லை,நான் எனக்கு உயிர்தப்புவதற்கான சந்தர்ப்பம் என நினைத்தேன்,நான் உடலில் டட்டுக்கள் பொறித்த வெளிப்படையான பத்திரிகையாளன்- இவை தலிபான் பின்பற்றும் கொள்கைகளிற்கு ...

Read More »

தலிபான் ஆட்சி எவ்வாறு அமையும்?

தலிபான் கிளர்ச்சிக் குழுவினர், திங்கட்கிழமை (17) முழு ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தூர பிரதேசங்களில், வேறு சில குழுக்கள் செயற்பட்டு வந்த போதிலும், அது, தலிபான்களின் நிர்வாகத்தை எவ்வகையிலும் இப்போதைக்குப் பாதிக்கப் போவதில்லை. தலிபான்கள், இவ்வளவு விரைவாக முழு நாட்டையும் கைப்பற்றிக் கொள்வார்கள் என, அமெரிக்கத் தலைவர்கள் நினைக்கவில்லை போலும்! கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்த கருத்துகளால் அது விளங்குகிறது. அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, “செப்டெம்பர் 11ஆம் திகதிக்கு முன்னர், அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் ...

Read More »

மரணங்கள் மலியும் பூமி

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் திரிபுகளின் அதிகரித்த தொற்றுக் காரணமாக சுகாதார, பொருளாதார, சமூக அடிப்படைகளில் பெரும் பின்னடைவையும் அவல நிலையையும் இலங்கை சந்தித்திருக்கின்ற இக்கால கட்டத்தில்,  அரசாங்கத்தால் எடுக்கப்படுகின்ற இவ்வாறான காலம் பிந்திய, மட்டுப்படுத்தப்பட்ட ...

Read More »

டெல்டா மாறுபாடு பரவும் நிலையிலும் இலங்கை ஜனாதிபதி பொது முடக்கங்களை எதிர்க்கின்றார்

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் கோவிட்-19 மரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுகளையும் மற்றும் சுகாதார அமைப்பின் சீர்குலைவுகளையும் கையாள்வதற்காக பொது முடக்கம் செய்யுமாறு மருத்துவ நிபுணர்கள் இடைவிடாது விடுக்கும் வேண்டுகோள்களை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நிராகரித்துள்ளார். ஜூலை 5 அன்று, இராஜபக்ஷ, கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான பல பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதுடன், ஜூலை 28 அன்று, வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களையும் தங்கள் வேலைத் தளங்களுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். அதி வேகமாக தொற்றும் டெல்டா மாறுபாட்டால் கோவிட்-19 பரவல் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ...

Read More »

அரிசி மலை இரகசியம்

கிழக்கு மாகாணம்  இயற்கை   வளங்களால் அழகு பெறும் ஒரு மாகாணம். அதில் திருகோணமலை மாவட்டமும் இயற்கையினை மேலும் அழகு பெறச் செய்கிறது. சுற்றுலாத் தளங்களின் ஒரு பகுதியாக புல்மோட்டை அரிசி மலை காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள பகுதியே அரிசிமலை பகுதி. பபளபளப்பான அரிசி போன்ற கற்கள் நிறைந்த இலங்கையின் விசித்திரமான கடற்கரை பிரதேசமாக இது விளங்குகிறது. திருகோணமலை நகர் பகுதியில் இருந்து சுமார் 56 கிலோ மீற்றர் தொலைவில் இவ் அரிசி மலை பிரதேசம் காணப்படுவதுடன், புல்மோட்டை ...

Read More »

பசில், பீரிஸ், சுமந்திரன், மிலிந்த கூட்டு ஜெனிவாவுக்கான காய் நகர்த்தலா?

ஜெனிவா பேரவை அமர்வுக் காலங்களில் இவ்வாறான சந்திப்புகள் திடீர் தோசை, திடீர் இட்லி போன்று வெளியில் காட்டப்படும். ஆனால், இவை மூடப்பட்ட கதவுகளின் பின்னால் திட்டமிட்டு நடத்தப்படுபவை என்பதை தமிழ் மக்கள் கடந்த கால அனுபவங்களால் நன்றாகவே கற்றுக் கொண்டுள்ளனர். அடுத்த மாத அமர்வுக்கு முன்னர் எதற்காக இந்த அவசர சந்திப்புகள்? சர்வதேசத்தை எத்திப் பிழைக்க தமிழரைக் கட்டியணைக்கும் அதே நாடகம்தானா? இலங்கை இப்போது இருமுனைப் போரில் ஈடுபட்டுள்ளது. முதலாவது உயிரியலுடன் சம்பந்தப்பட்ட கொரோனாப் பரவல். அடுத்தது, அரசியலுடன் தொடர்புடைய ஜெனிவா நெருக்கடி. இவையிரண்டுமே ...

Read More »

இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது !

இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு 34ஆம் ஆண்டு நிறைவையொட்டி யாழ் பல்கலைக்கழக அரசியல் துறைப் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.   கேள்வி? இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா? பதில்! ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய ...

Read More »

போராட்டங்களும் ஏமாற்றங்களும்

நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கும் போது, நாட்டை ஆள்வது ராஜபக்‌ஷர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில், முன்னைய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில், ஆர்ப்பாட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்ட போதிலும், இப்போது அந்தளவு கடுமையாக அடக்கப்படுவதில்லை. தெற்கே அதிபர்களும் ஆசிரியர்களும் ஆரம்பித்த போராட்டம், தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகவும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்த 2005 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில், பல ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2011, 2012, ...

Read More »