செய்திமுரசு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்: வைகோ காவலில்

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார். இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ...

Read More »

அவுஸ்ரேலியா: சூறாவளி தாக்கிய பகுதிகளில் துப்புரவு பணிகள்

அவுஸ்ரேலியாவில் சூறாவளி தாக்கிய பகுதிகளில் பெரியளவிலான துப்புரவுப் பணிகள் நடந்துவருகின்றன.சூறாவளியில் குறைந்தது இரண்டு பேர் மாண்டனர்.மூன்று பேரைக் காணவில்லை. கடந்த வாரம் பெய்த கன மழையிலும் வீசியக் கடும் காற்றிலும் குவின்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 770 மில்லியன் டாலர் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றுஅவுஸ்ரேலியக் காப்பீட்டு மன்றம் கணித்துள்ளது.

Read More »

அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அடுத்த வாரம் இந்தியா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் ...

Read More »

மைதிரியின் ஆலோசனையை நிராகரித்த முதலமைச்சர்கள்!

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடாத்து என்ற மைத்திரிபால சிறிசேனவின் யோசனையை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் நிராகரித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர்களுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்தார். இந்த திட்டம், சில மாகாணசபைகளை முன்கூட்டியே கலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன், சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடையவுள்ளது. மத்திய, மற்றும் வடக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இன்னமும் உயர்ந்துகொண்டிருக்கும் வெள்ளநீர்

அவுஸ்ரேலியாவில் வெள்ளநீர் இன்னமும் உயர்ந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகள் தடைபட்டிருக்கின்றன.அவற்றை மீண்டும் செயல்படுத்த அவசரநிலை ஊழியர்கள் பாடுபட்டுவருகின்றனர். டெபி சூறாவளியில் குறைந்தது மூவர் மாண்டனர். நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லந்து மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையில் சிலரைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்கப்பட்டது. அவை பேரிடர் பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மழை தணிந்தாலும், சில நகர்ப்பகுதிகளில் வெள்ளத்துக்கான எச்சரிக்கை நீக்கப்படவில்லை. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 770 மில்லியன் டாலர் பெரும்பாலான ...

Read More »

யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்தது

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் பொதுமன்னிப்பினை அடுத்து முடிவிற்கு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் ஒன்றுகூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடச் சபையினர் மாணவர்கள் மீதான இடைக்காலத் தடையை இரத்துச் செய்து அவர்கள் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கவேண்டும் என துணைவரிற்கு சிபாரிசு செய்வதாகவும் சமகாலத்தில் முழுமையான விசாரணைகளை நடாத்திக்கொள்ளுமாறும் ஊடக அறிக்கை வெளியிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதனையடுத்து நேற்று ...

Read More »

அவுஸ்ரேலியா சூறாவளியால் பெண்கள் பலி

அவுஸ்ரேலியாவில், டெபி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்ட இரண்டாவது பெண்ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லந்து மாநில எல்லையில் உள்ள மர்விலம்பாவுக்கருகே காணாமற்போன 64 வயது மாதின் சடலம் அது. அவரது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வாகனத்திலிருந்த அவரது 74 வயது கணவர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது. அவ்வட்டாரத்தில் வெள்ள நீர் 3 மீட்டர் இருந்ததாக மாநில அவசரகாலச் சேவை அமைப்பு தெரிவித்தது. டெபி சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தின் அளவு ஒரு பில்லியன் அவுஸ்ரேலிய டாலரை எட்டலாம் என்று அவுஸ்ரேலியக் காப்பீட்டுக் கழகம் மதிப்பிட்டுள்ளது.

Read More »

சவேந்திராவை நீதிமன்றம் அழைப்பது கடினமென்கிறது நல்லாட்சி!

நல்லாட்சி அரசினாலும் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக்குறிப்பிட்டதாக மூத்த சட்டத்தரணியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர். பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு ...

Read More »

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி!

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றினார். இறுதிக்கட்டப் போரின்போது, இவரின்கீழ் இயங்கிய 58ஆவது டிவிசன் பல போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ...

Read More »

முதலாவது பூமி நேரம் நிகழ்ச்சி சிட்னியில் தொடங்கப்பட்ட நாள்: மார்ச். 31, 2007

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு அவுஸ்ரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். ...

Read More »