அவுஸ்ரேலியா: சூறாவளி தாக்கிய பகுதிகளில் துப்புரவு பணிகள்

அவுஸ்ரேலியாவில் சூறாவளி தாக்கிய பகுதிகளில் பெரியளவிலான துப்புரவுப் பணிகள் நடந்துவருகின்றன.சூறாவளியில் குறைந்தது இரண்டு பேர் மாண்டனர்.மூன்று பேரைக் காணவில்லை.

கடந்த வாரம் பெய்த கன மழையிலும் வீசியக் கடும் காற்றிலும் குவின்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 770 மில்லியன் டாலர் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றுஅவுஸ்ரேலியக் காப்பீட்டு மன்றம் கணித்துள்ளது.