செய்திமுரசு

அவுஸ்ரேலியா தூதுவருடன் வியாழேந்திரன் கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் சிறிலங்காவிற்கான அவுஸ்ரேலிய தூதுவர் Bryce Hutchesson அவர்களை சந்தித்து மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன். யுத்த காலத்திலும் , யுத்தத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தில் பாரிய சவால்களை முகம் கொடுத்து வருபவர்களாக எம் மக்கள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பை நோக்கி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதே மிக அரிது. நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பில் யுத்தமே நடக்கவில்லை, மக்கள் பாதிக்கப்படவில்லை என பலர் நினைக்கிறார்கள் போல. ஆனால் நீங்கள் எம்மாவட்ட பிரச்சினைகளை செவிமடுத்தமையை விட முதலில் அழைப்பை ஏற்று இங்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவின் புதிய தொழிற்பட்டியல்!

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தில் state nomination ற்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அங்குள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லதொரு முன்னேற்ற நிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது ...

Read More »

வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா

உலக கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை நொறுக்கியது. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் டவுன்டானில் ...

Read More »

அவுஸ்ரேலிய சாதனையை முறியடித்த இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே எடுத்தது. ...

Read More »

கிறிஸ்மஸ் தீவிலிருந்து ம் 20 அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைப்பு!

கிறிஸ்மஸ் தீவிலிருந்து இன்று அதிகாலை வாடகை விமானம்மூலம் 20 இலங்கை அகதிகள் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி அவுஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கிறிஸ்மஸ் தீவில் இரண்டு கடற்படையின் படகுகளுக்கருகில் ஒரு சிறிய படகு நின்றதை கிறிஸ்மஸ் தீவு மக்கள் அவதானித்தனர். இதனால், சிறிலங்காவில் இருந்து அகதிகள் படகு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அகதிகள் படகொன்று இடையில் மறிக்கப்பட்டு 25 அகதிகள் ...

Read More »

வடமாகாண சபையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட இணக்கம்

எதிர்காலத்தில் மோதல்கள் இன்றி வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்தார். வடமாகாண சபை முறுகல் நிலையின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று (24) சந்திப்பு இடம்பெற்றது. வடமாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக இரு அமைச்சர்களை நியமிப்பது என்பது மிகவும் சிறிய விடயம். இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்துக் ...

Read More »

விக்டோரியாவில் Red Light & Speed கமெராக்கள் இயங்கவில்லை!

விக்டோரிய மாநிலத்தில் சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள சிவப்பு விளக்கு (fixed red light) மற்றும் (வேகத்தை படமெடுக்கும்)  280 கமெராக்களை (கருவிகளை) தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து நிறுத்திவிட அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தது 55 கமேராக்களின் கணினிகளில் (Computers) வைரஸ் இருப்பதாக நம்பப்படுவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், ஜூன் மாதம் 6 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 22 ஆம் திகதிவரை இந்த கமெராக்கள் படமெடுத்த 7500 படங்களும் மீளாய்வு செய்யப்பட்டு, இந்த  7500 அபராத டிக்கெட்டுகள் மறு பரிசீலனைக்கு உடபடுத்தப்படும் ...

Read More »

மேற்கு அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்!

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் state nomination-க்குப் பயன்படுத்தப்படும் Skilled Migration Occupations List – தொழிற்பட்டியலிலிருந்த 178 வேலைகள் தற்போது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திலுள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இம்மாற்றம் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் Mark McGowan தெரிவித்துள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கத்தொழிற்றுறை நல்லநிலையில் இருந்தபோது கட்டட மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்ட நிலையில், தற்போது அவ்வேலைகள் அனைத்தும் தொழிற்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. கீழ்க்காணும் மருத்துவதுறைசார் வேலைகள் மட்டுமே மேற்கு ஆஸ்திரேலிய மாநில தொழிற்பட்டியலில் எஞ்சியுள்ளன. ...

Read More »

மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்த அவுஸ்ரேலிய பொறியாளர்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொறியாளர் சூசன் கிரஹாம் என்பவர் மரங்களை நடும் ட்ரோன்களை வடிவமைத்து அசத்தியுள்ளார். இந்த புதிய ட்ரோன் மரங்கள் வளர்வதற்கேற்ற சூழலைத் தேர்ந்தெடுப்பதிலும், பின்னர் அந்த பகுதிகளில் விதைகளைத் தூவவும் உதவும் என்று சூசன் நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த ட்ரோன்கள் மூலம் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை நட முடியும் என்று கூறும் சூசன், பருவநிலை மாறுபாட்டில் காடுகள் அழிப்பு முக்கிய பங்கு வகிப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார். மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் மரம் வளர ஏற்ற சூழல் இருந்தால், ...

Read More »

ஈழ அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் – அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொள்ளவுள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன்படி அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பு கப்பலான ஓசியன் சீல்ட், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. அதன் அதிகாரிகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »