ஈழ அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் – அவுஸ்திரேலியா

இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்காதிருப்பதை தடுப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொள்ளவுள்ளது.

இதற்காக அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு படைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன்படி அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு கண்காணிப்பு கப்பலான ஓசியன் சீல்ட், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

அதன் அதிகாரிகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.