செய்திமுரசு

முதலமைச்சராகிறார் சசிகலா!

சென்னையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், சசிகலா விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததால் ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது. இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டும் என்று குரல் கொடுத்தனர். பொதுச்செயலாளர் பதவியும், முதல்-அமைச்சர் ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் நடைபெற இருந்த 2-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட ...

Read More »

மீன் சந்தை மக்கள் பாவக்காக திறப்பு!

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் உதவியுடனும் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் வலிகாமம் தென் மேற்கு பிரேதச சபை பிரிவில் 8.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய மீன் சந்தை மக்கள் பாவக்காக திறந்து வைக்கப்பட்டது இன்று (5) பிற்பகல் 3 மணியளவில் மாணிப்பாய் மீன்சந்தையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெயர்பலகையை திரைநீக்கம் செய்தும் கட்டிடத்தை நாடா வெட்டியும் திறந்து வைத்தார். வலிகாமம் மேற்கு பிரேதச செயலாளர் கு.பற்குனராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்குமாகாண ...

Read More »

அதிர்ச்சியில் அவுஸ்ரேலிய பிரதமர்!

அவுஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இணைப்பை பாதியிலேயே துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 45 வது அதிபராக டொனல்ட் டிரம்ப் அண்மையில் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து உலக நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் டிரம்ப். அந்த வகையில் அவுஸ்ரேலிய பிரதமர், மால்கம் டர்ன்புல்லிடம் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அவுஸ்ரேலியாவிடம் தஞ்சம் புகுந்த சிரியா உட்பட மேற்காசிய நாட்டு அகதிகளில் 1,250 பேரை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருந்தது பற்றி பேசியதாக தெரிகிறது. மேலும் அகதிகளை ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

அவுஸ்ரேலியாவிலுள்ள இலங்கையர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவுஸ்திரேலியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது. அந்தக்கட்சியின் பிராந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பில் சோர்டன், இலங்கையின 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1948ம் ஆண்டு வரலாற்று வெற்றியை பெற்ற இலங்கை, உலக நாடுகளுக்கு மத்தியில் தனது நாட்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடியது. அவுஸ்ரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் முறையான ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 70 ...

Read More »

அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகு பயணத்தை தொடங்கியது

நெடுந்தாரகைக்கு புதிய கப்டன் நியமிக்கப்பட்டதனையடுத்து நேற்று முன்தினம்(2) முதல் அதன் சேவையை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவல அதிகாரி தெரிவித்தார். இது தொடர்பில் குறித்த அதிகாரி மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு மக்களின் பயண பயன்பாட்டிற்காக நெல்சிப் திட்டம் மற்றும் அவுஸ்ரேலிய நிதிப்பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தாரகைப்படகானது கடந்த மாதம் 20ஆம் நாள் தனது முதல் உத்தியோகபூர்வ சேவையை ஆரம்பித்தபோதும் அதற்கான நிரந்தர அனுபவம் வாய்ந்த ஒரு கப்டன் தர அதிகாரி இன்மையால் அனுபவம் அற்ற புதிய பணியாளர்களை மட்டும் ...

Read More »

டைகர்ஏர் அவுஸ்ரேலியா இனி பாலி செல்லாது

இந்தோனேசியாவின் பாலி தீவுக்கான தனது சேவைகள் அனைத்தையும் நிரந்தரமாக ரத்து செய்யும் என்று டைகர்ஏர் அவுஸ்ரேலியா கூறியுள்ளது. Virgin Australia Holdings குழுமத்தைச் சேர்ந்தது டைகர்ஏர் அவுஸ்ரேலியா. வர்த்தக விமானத் துறைக்கான விதிமுறைகளை Virgin Australia Holdings நிறைவேற்றவில்லை எனக் கூறி இந்தோனேசியா அதற்கான அனுமதியை ரத்து செய்தது. தனது அனைத்துலக வர்த்தகத்தின் லாபத்தைப் பாதுகாக்க அந்நிறுவனம், தனது சேவைகளை டைகர்ஏர் அவுஸ்ரேலியாவுக்கு மாற்றிக்கொண்டது. டைகர்ஏர் அவுஸ்ரேலியா, பாலிக்கான தனது விமானச் சேவைகளை இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான இறுதிகட்ட அனுமதி ...

Read More »

நிராசையுடன் உயிர் நீத்த 103 வயது பாட்டி!

அமெரிக்காவின் அதிபராகத் திருமதி ஹிலரி கிளிண்டனை எப்படியேனும் பார்க்கவேண்டும் என்ற ஆசையுடன் கடந்தாண்டு முழுவதும் முழுவீச்சில் செயல்பட்டுள்ளார் நூறு வயதுக்கும் மேலான மூதாட்டி. 1913ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போருக்கு முன் பிறந்தவர் ருலின் ஸ்டைனிங்கர். தேர்தல்களில் பெண்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லாத காலம் அது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில், முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சியினருடன் ஸ்டைனிங்கர் மும்முரமாகப் பணியாற்றினர். அதற்கான பணிகளை முடிக்காமல் தமது உயிர் பிரியாது என்று அப்போது  ஸ்டைனிங்கர் திண்ணமாகக் கூறினார். கடந்த நவம்பரில்  டிரம்ப்பின் வெற்றி ...

Read More »

வடக்கு முதல்வருக்கு இந்திய மத்திய அரசினால் அச்சுறுத்தல்!

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால் பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இணைவதற்கு முன்னர் இந்தியாவின் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமை தொடர்பில் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாட்டின் நகர சபையுடன் ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுரை!

சுழற்பந்தை உங்களால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யாதீர்கள் என்று அவுஸ்ரேலியாவிற்கு பீ்ட்டர்சன் அறிவுறுத்தியுள்ளார். இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் கெவிட் பீட்டர்சன். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அப்போது 338 ரன்கள் குவித்தவர் பீட்டர்சன். இந்த மாதம் 23-ந்தேதி இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவுஸ்ரேலிய வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் அந்த அணி ...

Read More »