மீன் சந்தை மக்கள் பாவக்காக திறப்பு!

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் உதவியுடனும் நெல்சிப் திட்டத்தின் கீழும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சபைகள் மேம்படுத்தும் திட்டதின் கீழ் வலிகாமம் தென் மேற்கு பிரேதச சபை பிரிவில் 8.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய மீன் சந்தை மக்கள் பாவக்காக திறந்து வைக்கப்பட்டது

இன்று (5) பிற்பகல் 3 மணியளவில் மாணிப்பாய் மீன்சந்தையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெயர்பலகையை திரைநீக்கம் செய்தும் கட்டிடத்தை நாடா வெட்டியும் திறந்து வைத்தார்.

வலிகாமம் மேற்கு பிரேதச செயலாளர் கு.பற்குனராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடக்குமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் கஜதீபன் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், உள்ளூராட்சி ஆனையாளர் குகதாசன் , வடமாகாண அமைச்சின் செயலர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் மற்றும் பிரேதச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

unnamed (4)unnamed (5)unnamed (6)unnamed (7)unnamed (8)unnamed (9)unnamed (10)unnamed (11)unnamed (12)unnamed (13)unnamed (13)unnamed (14)unnamed (15)