அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

அவுஸ்ரேலியாவிலுள்ள இலங்கையர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவுஸ்திரேலியாவின் பிராந்திய நாடாளுமன்றத்தின் தொழிலாளர் கட்சி தெரிவித்துள்ளது.

அந்தக்கட்சியின் பிராந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பில் சோர்டன், இலங்கையின 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1948ம் ஆண்டு வரலாற்று வெற்றியை பெற்ற இலங்கை, உலக நாடுகளுக்கு மத்தியில் தனது நாட்டு தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தை பாடியது.

அவுஸ்ரேலியா மற்றும் இலங்கைக்கு இடையில் முறையான ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகளாகின்றன.

எமது உறுதியான நட்புறவு கல்வி, வர்த்தகம், முதலீடு, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற துறையில் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் இந்த சுதந்திர தினத்தின் போது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.