வடக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து அனைத்து சிங்களவர்களையும் விரட்டியடித்து, வடக்கினை தமிழர் தாயக பூமியாக மாற்றிய அமைக்க ஒன்றிணையுமாறு இந்த துண்டு பிரசுரத்தில் கோரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஒரு தரப்பினர் இந்த துண்டு பிரசுரங்களை வட மாகாணம் முழுவதிலும் விநியோகம் செய்துள்ளனர் எனவும் தமிழர் தாயக பூமிக்காக போராடுவோம் என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளது. இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ...
Read More »செய்திமுரசு
கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிற இந்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம்
காவேரி மீதான தமிழர்களின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிற, தமிழர்கள் மீது கர்நாடக அரசு நடத்தும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் மறைமுகமாக ஊக்குவித்து, தமிழர்களின் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியத்தினை கொள்ளையடித்தும் தமிழர்கள் மீது இனவெறி யுத்தத்தினை நடத்தும் இந்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம். தமிழர்களின் உரிமையை, வாழ்வாதாரத்தை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்திய மோடி அரசும், துணை செய்யும் காங்கிரசும் சனநாயக விரோதமாக, கூட்டாட்சி விரோதமாக , தமிழின விரோதமாக செயல்படுவதை கண்டிப்போம், அம்பலப்படுத்துவோம். சுயமரியாதை மிக்க தோழர்கள் ...
Read More »சிறீலங்காவின் பொறுப்புக்கூறல் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்
பொறுப்புக் கூறல் நடவடிக்கையின் போது சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருக்கும் வெள்ளபடையற்றத் தன்மைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இந்த வாரம் ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடருக்காக சர்வதேச மன்னிப்புச் சபை எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் சர்வதேச சட்டங்களை மீறும் ...
Read More »மெல்பேர்ணில் தமிழ் பெண் 8 ஆண்டுகளாக அடிமையாக நடத்தப்பட்டார்?
மெல்பேர்ணில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன. இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த குறித்த பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினருடனும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினருடனும் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் மீதான வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்னர் மெல்பேர்ண் மஜிஸ்திரேட் நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் இதன் ...
Read More »சிறீலங்காவை புரட்டியெடுத்த அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்
சிறீலங்காவை அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடி காட்டிய அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சிறீலங்கா – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் டி20 போட்டியில் 145 ஓட்டங்கள் விளாசி அணிக்கு சாதனை வெற்றியைத் தேடித்தந்த மேக்ஸ்வெல், 2வது போட்டியிலும் 66 ஓட்டங்கள் அடித்து அவுஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் அவுஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக ...
Read More »சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது
சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் ...
Read More »சிறீலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவையாம்
சிறீலங்காவின் தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம். தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க ...
Read More »அவுஸ்திரேலியா தொடர் வெற்றி
நேற்று(9) இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான T20 போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களையும், குஷால் ஜனித் பெரேரா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அத்துடன் தனது இறுதிப்போட்டியில் விளையாடிய டி.எம் டில்ஷான் 1 ஓட்டத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்தவகையில் 129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய ...
Read More »இந்தியாவிற்கு எதிரான 2001-ம் ஆண்டின் டெஸ்ட் தொடர் மறக்க முடியாதது- ரிக்கி பாண்டிங்
இந்தியாவிற்கு எதிராக 2001-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மறக்கமுடியாத ஒன்று என அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங் நினைவுக் கூர்ந்துள்ளார். அவுஸ்ரேலியாவில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியுடன் விளையாடிய 2001-ம் ஆண்டு டெஸ்ட் தொடர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2001-ம் அவுஸ்ரேலியா அணி அந்நாட்டிற்கு சென்றது. இந்த ...
Read More »4161 கோடி குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு
அமைச்சுக்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரி 4161 கோடிக்கும் அதிக குறைநிரப்பு மதிப்பீடு சிறீலங்கா நாடாளுமன்றில் நேற்று (9) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு, வெளிவிவகாரம், சுகாதாரம், போக்குவரத்து, பெருந்தெருக்கள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கல்வி, விளையாட்டு, இடர் முகாமைத்துவம், உள்நாட்டு அலுவல்கள், நிதி உள்ளிட்ட பல அமைச்சுக்களின் சம்பளம் மற்றும் பல்வேறு செலவுகளுக்காக இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் உருவாக்கப்பட்ட இந்திய அம்பியூலன்ஸ் சேவைக்கான நிதியாக 1121 இலட்சம் குறைநிரப்பு மதிப்பீடு சமர்பிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கப் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal