அவுஸ்திரேலியா தொடர் வெற்றி

நேற்று(9)  இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான T20 போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தனஞ்சய டி சில்வா 62 ஓட்டங்களையும், குஷால் ஜனித் பெரேரா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் தனது இறுதிப்போட்டியில் விளையாடிய டி.எம் டில்ஷான் 1 ஓட்டத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்தவகையில் 129 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 17 .5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெக்ஸ்வல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவரோடு களமிறங்கிய டேவிட் வார்னர் 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இதனடிப்படையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளை தவிர ஒருநாள் தொடரையும், இரண்டு T 20 போட்டிகளையும் வெற்றிபெற்றுள்ளது