செய்திமுரசு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை! ...

Read More »

கண்ணீருடன் கடந்த ஒரு மாதம் !

இலங்கையில் மீண்டும் எது இடம்பெறக்கூடாதென மக்கள் நினைத்தார்களோ அது மீண்டும் நடந்து முடிந்து இன்றுடன் ஒரு மாதம் கனத்த மனத்துடனும் கண்ணீருடனும் கடக்கின்றது. கடந்த 30 வருடகால உள்நாட்டுப்போர் ஓய்ந்து குண்டுச் சத்தங்களுக்கும் ஆயுதங்களுக்கும் ஓய்வுகொடுத்த இலங்கை, பத்து வருட நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வேளை, மீண்டும் இலங்கையை அதிரவைத்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்கள்.       இலங்கை மக்களாலோ ஏன் உலக மக்களாலோ ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இடம்பெற்ற அந்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையின் சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் ...

Read More »

சஹ்ரான் இறந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதி!

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. தற்கொலைத்தாரியான சஹ்ரானின் மகள், சகோதரி ஆகியோரின் ...

Read More »

குண்டுகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை தற்கொலை குண்டுதாரிகள் பெற்றது எப்படி?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குண்டுகளை தயாரிப்பதற்கான பயிற்சிகளை எங்கிருந்து பெற்றனர் என்பதை கண்டறிவதற்கான  விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தும்  சாத்தானின் தாய் என அழைக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளமை இலங்கை குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர்களிற்கு தொடர்புள்ளதை  உறுதி செய்துள்ளது என விசாரணை அதிகாரிகள் ஏஎவ்பி செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர். உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதம்முடிவடைகின்ற நிலையில் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். ஏப்பிரல் 21 தாக்குதலி;ற்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை உள்ளுர் தீவிரவாதிகள் வெளிநாட்டு நிபுணத்துவத்தின் உதவியுடன் பயன்படுத்தியுள்ளனர் ...

Read More »

60 தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமைப்பாட்டு பிரகடனம்!!

முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பத்தாவது ஆண்டில், இன்று சனிக்கிழமை 18 – 05 – 2019 அறுபதிற்கும் மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமைப்பாட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆங்கில வடிவம்: On 18 May 2019, ten years since the Sri Lankan state’s genocide against the Tamil nation reached its peak, we stand in solidarity with our brethren in their quest for justice. We believe that an independent international ...

Read More »

ஈழ தமிழ் குடும்பத்திற்காக அவுஸ்திரேலியர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக சுமார் 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளது. திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததோடு, நேற்று முன்தினம் குறித்த கையெழுத்துக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம் – பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ...

Read More »

மீண்டும் லிபரல் கூட்டணி ஆட்சியில்! அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

தான் முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பிரதமர் Scott Morrison விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் கூடும்போது வரிக்குறைப்பு தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பிரதமர் விடுப்பார் என குறிப்பிடப்படுகின்றது. ஆண்டொன்றுக்கு 126 ஆயிரம் டொலர்கள்வரை வருமானமீட்டுபவர்களுக்கு 1080 டொலர் வரிக்குறைப்பினை வழங்கும் Morrisonனின் திட்டத்தை அவரது நிதியமைச்சர் நடைமுறைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த புதிய ஏற்பாடுகளுடன்கூடிய திருத்தம் மற்றும் விசேட ...

Read More »

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019

இலங்கைத்தீவில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வும், தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வும் சிட்னியில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.   கடந்த சனிக்கிழமை 18 – 05 – 2019 அன்று மாலை 6.30 மணிக்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிதர்சன் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை குமார் தம்பிராசா அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து தேசிய கொடியேற்றல் நிகழ்வு நடைபெற்றது.   அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்  லிங்கராசா சாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியகொடியை ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2019

இலங்கைத்தீவில் நீண்டகாலமாக சிங்களப் பேரினவாத சக்திகளால் இனப்படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களையும், அந்த இனவழிப்பின் உச்சமாக 2009-ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய மாபெரும் மனிதப் பேரவலத்தின்போதும் காவுகொள்ளப்பட்ட தமிழ் மக்களையும் நினைவுகூருகின்ற தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நிகழ்வு, கடந்த 18-05-2019 சனிக்கிழமை மெல்பேர்ணில்; உணர்வுபூர்வமாக நடைபெற்றது.   மெல்பேர்ணில் அமையப் பெற்றுள்ள கங்கேரியன் சமூக மண்டபத்தில், மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிகா தலைமையில ஆரம்பமாகிய இந்நிகழ்வில், முதல்நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது, தனது இரண்டு பிள்ளைகளை இழந்து, பின்னர் ...

Read More »

ஈரானின் இராஜதந்திர போர் 2019!

ஈரானுடனான உலக நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்ட ஓராண்டுக்குப் பின்னர் ஈரான் அதன் யுரேனியத்தை தொடர்ச்சியாக வைத்திருத்தல் என்று அறிவித்ததன் மூலம், மேற்குலகத்துக்கு உறுதியான மற்றும் தெளிவான செய்தியை ஈரான் சொல்லியிருக்கிறது. கடந்தாண்டு, ஐரோப்பிய முக்கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் புதுப்பிக்க முற்பட்ட வேளையில், ஐரோப்பிய நாடுகள் ஈரானின் நன்னோக்கத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் எந்த ஒரு கொள்கை நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, ஐக்கிய அமெரிக்காவின் கொள்கைக்கு ஏற்றதாகவே, ஈரானிய ஏவுகளை திட்டங்களைக் குறைக்க அல்லது ஈரானின் ...

Read More »