செய்திமுரசு

சிறுகதையிலிருந்து நாவலுக்கு: ஐந்து எழுத்தாளர்களின் அனுபவங்கள்…!

களைகட்டிய சென்னைப் புத்தகக்காட்சியில் இலக்கிய நூல்கள் புது வேகம் கூட்டியிருக்கின்றன. இம்முறை பல எழுத்தாளர்கள் நாவல்களோடு களம் இறங்கியிருந்தார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. சிறுகதைகளுக்குள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களில் பலரும் இந்த முறை நாவலின் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். முதல் நாவலை வெளியிட்டிருக்கும் சிறுகதையாசிரியர்களில் ஐவர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்… சுரேஷ்குமார் இந்திரஜித்- ‘கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்’ நாவலாசிரியர் சுமார் நாற்பது ஆண்டு காலமாகச் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு, நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, ஆதித்ய சிதம்பரம் என்ற எழுத்தாளர் உருவானார். அவர் குறுநாவல் ...

Read More »

புதிதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்!

2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு இறுதியாக நாட்டில் 2012 இல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மொத்த ...

Read More »

கிழக்கில் மிதக்கும் பாதை!

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மிதக்கும் பாதையை கிழக்கு மாகாண ஆளூநர்   அனுராதா யஹம்பத் நேற்று  (24) ஆரம்பித்து வைத்துள்ளார்.  

Read More »

இன்னும் விலகாத மர்மம்…..!

இந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா – நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ. இதையடுத்து 18.08.1945 அதிகாலையில், தன்னுடைய உதவியாளர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் ஜப்பான் தளபதிகள் உள்ளிட்ட ஒன்பது பேருடன் ...

Read More »

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 18 பேர் பலி; 500க்கும் மேற்பட்டோர் காயம்!

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 18 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில் , ”துருக்கியில் எலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரைஸ் நகரில் வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 15 கிலோ மீட்டர் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பின் 35 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக துருக்கி பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் ...

Read More »

சீனர் ஆஸ்திரேலிய எல்லைப்படையால் கைது!

மேற்கு ஆஸ்திரேலியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்ததாக 28 வயது சீனரை ஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது. போலி நிறுவனங்களை உருவாக்கி தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது போன்று, அந்நிறுவனங்களைக் கொண்டு 4 மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றத்தை இவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டப்பட்டு வரும் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு Battenrun எனும் நடவடிக்கையின் கீழ் இந்நபருக்கு கைதாணை வழங்கப்பட்டு, இந்த சீனர் கைது செய்யப்பட்டுள்ளார். “இந்நடவடிக்கையில் நாங்கள் சுரண்டப்படுபவர்களை குறிவைக்கவில்லை, மாறாக சட்டவிரோதமான இடப்பெயர்வு முறைக்கேட்டில் ஈடுபடும் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்-சுயாதீன விசாரணை வேண்டும்!

காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றின் ஊடாக தெளிவு படுத்தப்பட வேண்டும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிடமிருந்து ஒரு வார்த்தை வராதா என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எமது மக்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் காணாமல் போயுள்ள மக்கள் யுத்தத்தின் ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி !

அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவிவரும் காட்டுத்தீணை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு விமானமொன்றுதெற்கு நியூ சவுத் வேல்ஸில் திடீரென காணமல் போனது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவுக்கு தெற்கே உள்ள பனி மலைகளில் விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தில் பயணித்த மூன்று பேரும் ;அடையாளம் காணப்படாதபோதிலும் குறித்த மூவரும் அமெரிக்கப் பிரஜைகள் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். விபத்திற்குள்ளான ஹெர்குலஸ் சி -130 ...

Read More »

இறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாது!

இலங்கையின் கொடுரமான நீண்ட கால உள்நாட்டு போரின் போது காணாமல் போன தங்களின் உறவுகள் குறித்த வார்த்தைக்காக தவிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையை சிதறடித்துள்ள இலங்கை ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்த அவர்களின் எதிர்பார்ப்புகளிற்கு அக்கறையற்ற மறுப்பை வெளியிட்டுள்ளார். காணாமல்போனவர்கள் இறந்துவிட்டனர் அவர்களை என்னால் உயிருடன் கொண்டுவரமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் துயரமான ஒரு அத்தியாயத்தை முடித்துவைப்பதற்கு விரும்பும் அரசாங்கம் காணாமல்போன இலங்கையர்களிற்கு மரண சான்றிதழை வழங்க முயல்கின்றது. ஆனால் 2009 இல் முடிவிற்கு வந்த இலங்கை யுத்தத்தில் காணாமல்போன அனைவரினது ...

Read More »

காட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை!

கடந்த ஒரு மாதத்திறகு மேலாக அவுஸ்திரேலியாவின் பெரும் பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு மக்களும் உயிரினங்களும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகின. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் உட்பட கிழக்கு அவுஸ்திரேலியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புழுதிப் புயல் அடித்தது. குறித்த புழுதிப்புயுல் சூரியனை மறைக்கும் அளவு காற்று உயர்ந்து, பகல் பொழுதையே இரவு நேரம்போல் காட்சியளிக்க வைத்துவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மதியம் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அதில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக உள்ளூர் ...

Read More »