திரைமுரசு

ஐஸ்வர்யா ராய் எடுத்த அதிரடி முடிவு

தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்ததும், பின்னர் பிரிந்துவிட்டதும் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர்கள் காதலர்களாக இருந்தபோது படங்களில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ஏன் ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் சேர்ந்து நடிக்க தயார் என்றும், ஆனால் கதையும், இயக்குனரும் வழக்கத்தை ...

Read More »

விஜய்சேதுபதி சிறப்புப் பேட்டி

தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ‘றெக்க’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர்ச்சியாகப் படங்கள் வெளியானாலும் அவரின் பேச்சு எப்போதுமே யதார்த்தத்தின் அழகுடன் வெளிப்படும். அவரிடம் பேசியதிலிருந்து… றெக்க’ மூலமாக நீங்களும் கமர்ஷியல் நாயகனாகிவிட்டீர்களே… ‘றெக்க’ மட்டுமல்ல ‘ஆண்டவன் கட்டளை’ , ‘தர்மதுரை’ இரண்டுமே கமர்ஷியல் படங்கள் தான். ‘றெக்க’யில் காதலைச் சேர்த்து வைக்கிற நபராக நான் நடித்திருக்கிறேன். அதுக்கு ஒரு காரணம் வேண்டாமா? அதனால் காதல் ப்ளாஷ் பேக் இருக்கும். அதை வைத்துத்தான் இக்கதை ...

Read More »

சண்முகப்பாண்டியன் நடிக்கும் இருமொழிப்படம்!

விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் சகாப்தம். விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த அந்த படத்தில் சண்முகப்பாண்டி யனுடன் தேவயானி, சிங்கம்புலி, பவர்ஸ்டார் உள்பட பலர் நடித்தனர். அப்படத்தை சுரேந்தர் இயக்கியிருந்தார். அதையடுத்து உடனடியாக சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதுதான் ஒரு படத்தில் அவர் கமிட்டாகியிருக்கிறார். மேலும், தெலுங்குப்பட இயக்குனர் பசீர் இயக்கும் அப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறதாம். முதல் படத்திலேயே காதல், ஆக்சன், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் பர்பாமென்ஸ் கொடுத்த ...

Read More »

‘டிஜிட்டலில்’ எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்

எம்.ஜி.ஆர்-மஞ்சுளா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து தயாரித்து,இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 43 வருடங்களுக்கு பிறகு இந்த படம் புது பொலிவுடன் டிஜிட்டலில் விரைவில் வருகிறது. இதில் மஞ்சுளா, லதா,சந்திரகலா,நாகேஷ்,அசோகன்,மனோகர்,தேங்காய் சீனிவாசன்,நம்பியார், வி.கோபாலகிருஷ்ணன்,மேட்டா ரூங்ராத் (தாய்லாந்து) ஆகியோர் நடித்துள்ளனர்.எம்.எஸ். விசுவநாதன் இசையில் கண்ணதாசன்,புலமைப்பித்தன்,வாலி, புலவர் வேதா ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர். ஆர்.எம். வீரப்பன்,சாமி, லட்சுமணன் மூவரும் இணைந்து எழுதிய கதைக்கு சொர்ணம் வசனம் எழுதி ...

Read More »

கணவரை வில்லனாக களமிறங்கி விட்டுள்ளார் சிம்ரன்

திருமணம் செய்து கொண்ட பல மாஜி நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பிசியாகி வருகின்றனர். ஆனால் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரனுக்குத்தான்  மீள் வருகை  பெரிதாக அமையவில்லை. ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். அதோடு தனது கணவர் தீபக்கையும் முன்னணி நடிகர்களின் படங்களில் அறிமுகம் செய்ய சான்ஸ் கேட்டு வந்தார் சிம்ரன். ஆனால் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக காத்திருந்து காலம் கடத்த ...

Read More »

உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பாடகி லதா மங்கேஷ்கர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டதாக திரைப்படத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று 87-வது பிறந்தநாள். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டார். சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவவீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இது லதா மங்கேஷ்கருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் மனதை விட்டு நீங்காததால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட ...

Read More »

தமிழ் திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்

  சினிமா பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலை நேற்று (27) மாரடைப்பால் காலமானார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை, சினிமாவில் பாடல் எழுத வரும் முன் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். எம்பில் முடித்தவர், பிஎச்டி ஆய்வுப் பட்டத்துக்கான முயற்சியிலும் இருந்தார். சித்திரப் பாவை டிவி தொடருக்குதான் முதலில் பாடல் எழுதினார். தொடர்ந்து 15 தொடர்களுக்கு பாடல்கள் எழுதினார். புதுவயல் என்ற படத்தில் 1992-ல் தனது முதல் பாடலை எழுதினார் அண்ணாமலை. அதன் பிறகு கும்மாளம், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்பட ஏராளமான படங்களுக்கு எழுதினார். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் ...

Read More »

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியுள்ளது ஆச்சர்யத்தை கொடுக்கிறதா? ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’. இப்படம் தற்போது ‘ஆங்கில படம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தில் தலைப்பில் ஆங்கிலம் இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காக ‘ஆங்கிலப்படம்’ என்று மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி அவர் கூறும்போது, ‘ஆங்கில படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை ...

Read More »

இசைக்கு நாடு, காலம் கிடையாது – இளையராஜா

பாகிஸ்தான் நடிகர்-நடிகையர் மற்றும் இசைக் கலைஞர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துவரும் நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் இளையராஜா, ‘இசைக்கு நாடு கிடையாது’ என்று தெரிவித்துள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசைஞானி இளையராஜா இந்த மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், அட்லான்ட்டா, நியூயார்ல், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் தமிழிலும், தெலுங்கிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் நேற்று(25 )செய்தியாளர்களை இளையராஜா சந்தித்தார். அப்போது, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் நடிகர்-நடிகையர் ...

Read More »

3 மொழிகளில் வெளியாகும் லிங்குசாமியின் கவிதை தொகுப்பு

சூர்யா நடிப்பில் இயக்கிய அஞ்சான் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு சண்டக்கோழி-2 படத்தை லிங்குசாமி இயக்குகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பின்னர் அவருக்கும், விஷாலுக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தனது அடுத்த படத்தை லிங்குசாமி இயக்கயிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதனால் அந்த படத்திற்கான வேலைகளில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. இந்த நிலையில், லிங்குசாமி எழுதிய லிங்கூ-2 என்ற கவிதை தொகுப்பு மூன்று மொழிகளில் மொழி பெயர்க்கப்படுவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. முதலில் அவர் ...

Read More »