திரைமுரசு

அவுஸ்ரேலியா போகும் வாணி ராணி குழு

வாணி ராணியில் சீரியலில் தற்போது பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையில்   இருந்து தப்பிய ஆர்யாவை கண்டுபிடிக்க கவுதம் முயற்சி செய்கிறான். ராணியின் கணவர் சாமிநாதனை காணாமல் தவித்து வருகிறார் ராணி. பரபரப்பான எபிசோடுகளுடன் பயணப்படும் வாணி ராணி சீரியல் சில எபிசோடுகள் அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி, தென்காசி, குற்றாலம் என்று பயணித்த வாணி ராணி இப்போது அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. சரவணன் தன் மனைவியுடன் அவுஸ்ரேலியாவிற்கு தேன்நிலவு போக, அங்கே வில்லி தேஜூவும் பயணிக்கிறாள். இருவரையும் சந்தோசமாக இருக்க விடுவாளா? என்பது ...

Read More »

2.0 படப்பிடிப்பில் ரஜினிகாந்துக்கு காலில் காயம்

சென்னையில் நடந்த ‘2.0’ படப்பிடிப்பின் போது, நடிகர் ரஜினிகாந்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ‘கபாலி’ திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம், ‘2.0’. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிகாந்த்-ஷங்கர் கூட்டணியின் முந்தைய படைப்பான ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகமாக இந்த ...

Read More »

‘கடவுள் இருக்கான் குமாரு’ – விமர்சனம்

இயக்குநர் எம். ராஜேஷின் திரைப்படங்களில் கதை, லாஜிக் என்று பெரிதாக ஏதும் இருக்காது. நாயகன்  தன் காதலைத் துரத்துவது. இருவருக்கும் நேரும் ஊடலும் கூடலும், உதவி செய்கிறேன் என்கிற பேரில் உபத்திரவம் செய்யும் நண்பன். அவருடைய எல்லாத் திரைப்படங்களிலும் இந்த ஒருவரிக்கதைதான் திரும்பத் திரும்ப வரும். இந்த திரைப்படத்திலும் அதேதான். சமகால இளைஞர்களின் கலாய்ப்புத்தன்மையுடன் கூடிய உரையாடல்கள்தான் ராஜேஷ் உருவாக்கும் நகைச்சுவையின் அடிப்படை. வானத்தின் கீழே உள்ள சகல விஷயங்களையும் நபர்களையும் கதறக் கதறக் கலாய்ப்பார்கள். கூடவே பரஸ்பரம் தங்களையும் கிண்டலடித்துக் கொள்வார்கள். அப்போதைய சர்ச்சைகள், ...

Read More »

இரட்டை பெண் இசை அமைப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் விஸ்வநாதன்  ராமமூர்த்தி, சங்கர்    கணேஷ் என்ற இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள், ஆனால் பெண் இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி விஜயலட்சுமி. கர்நாடக இசை மேதைகளான சூலமங்கலம் சகோதரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், பல நூறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர். பக்தி பாடல்களுக்கு பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைப்பார்கள். ஆனால் அவர்கள் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்கள். ஆனால் அது நான்கே நான்கு படங்கள்தான். 1970ல் வெளிவந்த தரிசனம், 1974ல் வெளிவந்த டைகர் ...

Read More »

இளம் இசையமைப்பாளர் அனிருத்

குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் இளம் இசையமைப்பாளர் அனிருத். அவருக்கென தனி பாணியையே ஆரம்பத்திலிருந்து கடைபிடித்து வருகிறார். தன்னுடைய ஆல்பம்களில் பாடுவதோடு மட்டுமில்லாமல் பல வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கும் அனிருத் தொடர்ந்து பாடி வருகிறார். அதிலும் திரைத்துறையில் பிரபல ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளர் மற்றவர்களுக்கு பாடி கொடுப்பது என்பது அனிருத்கே உரிய தனி பாணி தான். ரோமியோ ஜூலியட் படத்திற்காக இசையமைப்பாளர் இமான் இசையில் டண்டனக்கா பாடலை அனிருத் பாடியிருந்தார். அந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து ...

Read More »

அமீர்கான் படம் தமிழில் வெளியாகிறது

இந்திபட உலகில் அடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தங்கல்’. அமீர்கான் நடித்துள்ள இந்த படத்தை தமிழில் ‘டப்’ செய்து வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இந்திபட உலகில் அடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘தங்கல்’. அமீர்கான் நடித்துள்ள இந்த படத்தை நிதீஷ்திவாரி இயக்கி இருக்கிறார். டிஷ்னிவோல்டு சினிமாவுடன் அமீர்கானும் சேர்ந்து இதை தயாரிக்கிறார். இது பிரபல குத்துச்சண்டை வீரர் மகாவீர்சிங் போகத் வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘பிகே’ படம் தமிழில் வெளியாகி நன்றாக ஓடியது. ‘தோனி’ படமும் தமிழில் ...

Read More »

நான் திருமணத்துக்கு முன்பு நடித்ததை விட இப்போது சிறப்பாக நடிப்பதாக உணர்கிறேன்

தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனிலியா தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இந்தியில் ‘போர்ஸ்-2’ என்ற படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு ...

Read More »

நாங்கள் பிரிந்திருந்தாலும் கூட, எங்களது காதல் உண்மையானது !- அமலா பால்

சமீப காலமாக நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியிலான திருமண பந்தம் கருத்து வேறுபாடு என்ற ஒற்றை காரணத்தை சுட்டிக்காட்டி விவாகரத்து ஆகிவருகிறது. இதில், சில மாதங்களுக்கு முன்னர் தென்னிந்தியா நட்சத்திர தம்பதிகளான அமலா பால் – இயக்குனர் விஜயும் விவாகரத்து பெற்றனர். இதற்கு அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என்று பலர் கூறி செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஒரு இளம் நடிகரின் பெயர் விவாகரத்து வாங்கி தரும் வழக்கறிஞர் போல சித்திரிக்கப்பட்டது.ஆனால், உண்மையில் தனது திருமண வாழ்க்கை முற்று பெற்றதற்கான ...

Read More »

இளையராஜாவின் ஆங்கில படம்- அவுஸ்ரேலிய பெண்ணின் கதை

“அவள் ஒரு ஆஸ்திரேலிய பெண்… பெற்றோர் கிடையாது. அன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், உறவுகள் அறிந்தவள் இல்லை. ஒரு இந்தியப் பையன், இவள் மீது காட்டும் அன்பு, காதலாய் மாறுகிறது. அவள் அந்தக் காதலைப் பூரணமாய் உணரும் அந்தத் தருணத்தில்… ஒரு பாடல் வேண்டும் ” இயக்குநர் சொல்லி முடிக்கிறார். சரியாக எட்டு நிமிடங்கள் கரைகிறது. அந்த கிடாரில் அற்புதமாய் ஒரு ட்யூன் உருவாகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அது முழுப் பாடலாய் உருவாகிறது. ராஜா… இளையராஜா இசையமைத்திருக்கும் முதல் ஆங்கிலத் திரைப்படம் . அந்த ஆங்கிலப் ...

Read More »

ப்ரியா பவானிஷங்கர் அவுஸ்ரேலியா செல்வது ஏன்?

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பு செய்திகள் பல இருந்தாலும், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் இருந்து ப்ரியா பவானிசங்கர் ஏன் விலகினார் என்று பலர் குழம்பிக் கொண்டிருக்கின்றனர். அவரது விலகல் தொடர்பாக பல தகவல்கள் உலவுகின்றன. சந்தேகம் பல எழுந்ததால், அதை தீர்த்துக்கொள்ள அவரிடமே பேச முயற்சித்தோம். ஆனால், ‘நான் இப்ப ரொம்ப பிஸி. ப்ளீஸ்… கொஞ்ச நாள் கழிச்சு நானே பேசுறேன்!’ என்பதோடு ’பை பை’ சொல்கிறார். ‘கல்யாணம் முதல் காதல் வரை’  சீரியலின் நாயகன் அமித்திடம் பேசினோம். “அவர் ஏன் இப்போ ...

Read More »