அவுஸ்ரேலியா போகும் வாணி ராணி குழு

வாணி ராணியில் சீரியலில் தற்போது பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. காவல்துறையில்   இருந்து தப்பிய ஆர்யாவை கண்டுபிடிக்க கவுதம் முயற்சி செய்கிறான். ராணியின் கணவர் சாமிநாதனை காணாமல் தவித்து வருகிறார் ராணி.

பரபரப்பான எபிசோடுகளுடன் பயணப்படும் வாணி ராணி சீரியல் சில எபிசோடுகள் அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல், ஊட்டி, தென்காசி, குற்றாலம் என்று பயணித்த வாணி ராணி இப்போது அவுஸ்ரேலியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

சரவணன் தன் மனைவியுடன் அவுஸ்ரேலியாவிற்கு தேன்நிலவு போக, அங்கே வில்லி தேஜூவும் பயணிக்கிறாள். இருவரையும் சந்தோசமாக இருக்க விடுவாளா? என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பு.