இரட்டை பெண் இசை அமைப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் விஸ்வநாதன்  ராமமூர்த்தி, சங்கர்    கணேஷ் என்ற இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள், ஆனால் பெண் இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி விஜயலட்சுமி.

கர்நாடக இசை மேதைகளான சூலமங்கலம் சகோதரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், பல நூறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர்.

பக்தி பாடல்களுக்கு பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைப்பார்கள். ஆனால் அவர்கள் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்கள். ஆனால் அது நான்கே நான்கு படங்கள்தான்.

1970ல் வெளிவந்த தரிசனம், 1974ல் வெளிவந்த டைகர் தாத்தாச்சாரி, 1979ல் வெளிவந்த அப்போதே சொன்னேன் கேட்டியா, 1984ல் வெளிவந்த பிள்ளையார் படங்களுக்கு இசை அமைத்தார்கள்.

சோ நடித்த மனம் ஒரு குரங்கு படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து பாடியிருந்தனர். சில பக்தி படங்களில் சூலமங்கலம் சகோதரிகளின் கச்சேரி காட்சிகள் இடம்பெற்றது.