அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது!

சீனா எங்கும் கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல் பரவலாக உள்ள நிலையில், அப்பதற்றம் உலகின் பல பகுதிகளிலும் நிலவி வருகிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியாவின் வடக்கு கடல் பகுதியினூடாக 6 சீனர்கள் நுழைய முயன்ற சம்பவம், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் உயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தேவையை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு சீனாவின் Jiangsu மாகாணத்திலிருந்து இந்தோனேசியாவின் பாலி பகுதிக்கு புத்தாண்டு தினத்தன்று வந்த ஆறு சீனர்கள், திமோர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். இதற்காக ஒருவருக்கு தலா 1000 டாலர்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போது மூச்சு திணறி பெண் உயிரிழப்பு!

ஆஸ்திரேலியாவில் லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட பெண் மூச்சு திணறி உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குயின்லாந்து மாகாணத்தின் ஹெர்பிபே நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய உணவுப்பொருளான லாமிங்டோன் எனப்படும் கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு கேக்குளை சாப்பிட்டனர். அப்போது போட்டியில் கலந்து கொண்ட 60 வயது பெண் ஒருவருக்கு திடீரென தொண்டையில் கேக் சிக்கியது. அதனை ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், கிவிட்டோவா கால்இறுதிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் மற்றும் கிவிட்டோவா ஆகியோர் கால்இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றனர். கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 7-ம் நிலை வீராங்கனையும், கடந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றவருமான பெட்ரா கிவிட்டோவா (செக்குடியரசு) இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியை எதிர்கொண்டார். இதில் கிவிட்டோவா 6-7 (4-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு ...

Read More »

சீனர் ஆஸ்திரேலிய எல்லைப்படையால் கைது!

மேற்கு ஆஸ்திரேலியாவில் உணவு பதப்படுத்தும் தொழிலில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டி வந்ததாக 28 வயது சீனரை ஆஸ்திரேலிய எல்லைப்படை கைது செய்துள்ளது. போலி நிறுவனங்களை உருவாக்கி தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது போன்று, அந்நிறுவனங்களைக் கொண்டு 4 மில்லியன் டாலர்கள் பணப்பரிமாற்றத்தை இவர் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. வெளிநாட்டுத் தொழிலாளர்களை சுரண்டப்பட்டு வரும் நிலையை கட்டுப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு Battenrun எனும் நடவடிக்கையின் கீழ் இந்நபருக்கு கைதாணை வழங்கப்பட்டு, இந்த சீனர் கைது செய்யப்பட்டுள்ளார். “இந்நடவடிக்கையில் நாங்கள் சுரண்டப்படுபவர்களை குறிவைக்கவில்லை, மாறாக சட்டவிரோதமான இடப்பெயர்வு முறைக்கேட்டில் ஈடுபடும் ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி !

அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பரவிவரும் காட்டுத்தீணை அணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு விமானமொன்றுதெற்கு நியூ சவுத் வேல்ஸில் திடீரென காணமல் போனது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவுக்கு தெற்கே உள்ள பனி மலைகளில் விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. விமானத்தில் பயணித்த மூன்று பேரும் ;அடையாளம் காணப்படாதபோதிலும் குறித்த மூவரும் அமெரிக்கப் பிரஜைகள் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். விபத்திற்குள்ளான ஹெர்குலஸ் சி -130 ...

Read More »

காட்டுத் தீயில் வெந்த அவுஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை!

கடந்த ஒரு மாதத்திறகு மேலாக அவுஸ்திரேலியாவின் பெரும் பகுதிகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு மக்களும் உயிரினங்களும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகின. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் உட்பட கிழக்கு அவுஸ்திரேலியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புழுதிப் புயல் அடித்தது. குறித்த புழுதிப்புயுல் சூரியனை மறைக்கும் அளவு காற்று உயர்ந்து, பகல் பொழுதையே இரவு நேரம்போல் காட்சியளிக்க வைத்துவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மதியம் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அதில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் இருவர் படுகாயம் அடைந்திருப்பதாக உள்ளூர் ...

Read More »

அவுஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து?

அவுஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஏற்கனவே காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றினால் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது ஓர் வகையான விசத் தன்மையுடைய சிலந்திகள் (Funnel-web spiders) குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு அவுஸ்திரேலியாவின் ஈரமான வனப் பகுதியில் உள்ள இந்த சிலந்தி வகைகள் விரைவாக செயற்படக் கூடிய மிகவும் நச்சுத் தன்மை கொண்டவை என நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சோமர்ஸ்பியை மையமாகக் கொண்ட அவுஸ்திரேலிய ஊர்வன பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ற இந்த சிலந்திகளானது உலகின் ...

Read More »

ஆஸ்திரேலிய மத போதகர் தனது குழந்தைகளுடன் ஒரிசாவில் எரித்துக்கொள்ளப்பட்ட நாள் (ஜன.22- 1999)

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மர்ம மனிதர்களால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர்.  

Read More »

அகதிகளை சிறை வைக்கும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவு நாடுகளில் அகதிகளை சிறைவைக்கும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், பப்பு நியூ கினியாவில் உள்ள பொமனா சிறை வளாகத்தில் அமைந்துள்ள குடிவரவுத் தடுப்பு மையத்தில் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தூக்கமின்மையால் சித்ரவதைப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் நிதியுதவினால் கட்டப்பட்ட பொமனா சிறை வளாகத்தில் கட்டப்பட்ட குடிவரவுத் தடுப்பு மையத்தில், ஏழு ஆண்டுகளாக மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த தஞ்சக்கோரிக்கையாளர்களில் 18 பேர் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்து ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா?

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நாளை (ஜனவரி 19) நடைபெற உள்ளது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால்  தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ...

Read More »