அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவில் வெறிச்சோடி வரும் சூப்பர் மார்க்கெட்டுகள் – காரணம் என்ன?

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியால் சூப்பர் மார்க்கெட் கடைகளில் டிஷ்யூ பேப்பர்கள், வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்டவை உடனே விற்று தீர்ந்துவிடுவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.87 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான சூப்பர் ...

Read More »

சிட்னியில் மழை பெய்ததால்…….! எங்கள் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது!

சிட்னியில் மழை பெய்ததால் விளையாடாமலேயே வெளியேற்றப்பட்டதால் இங்கிலாந்து அணி கப்டன் ஹீதர் நைட் கடும் வேதனை அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளும் ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. நேற்று இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது. முதல் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ...

Read More »

கொரோனா வைரஸ் – பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா அச்சம்!

கொரோனா வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் என அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த பல வாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் அவசரகால திட்டங்களை உருவாக்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் நிலை குறித்து அவுஸ்திரேலியா கவலையடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இதேவேளை அவுஸ்திரேலிய மக்களை வழமை போன்று நடந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது நீங்கள் கடைக்கு செல்லும்போது முகக்கவசத்தை ...

Read More »

விடுதலையை கோரி அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்ற ஈழத்தமிழ் மாணவி!

நீண்டகால தடுப்புமுகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், ஆண்டு 12 இல் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவியே அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ளார். பத்து ஆண்டுகளாக தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த தமிழ் அகதிகள் இருவரும், மனிதாபிமானமற்ற முறையில் கொடுமையான வாழ்வுக்குள் சிக்குப்பட்டுள்ளதை, சர்வதேச சமூகங்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக, அவரது பயணம் அமைந்துள்ளது. மெல்பேணில் உள்ள மைற்றா தடுப்புமுகாமில் உள்ள இருவரையும், கடந்த சில வருடங்களாக சந்தித்துவந்த அவர், அவர்களது காலவரையற்ற தடுப்புமுகாம் வாழ்வை முடிவுக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்குள் செல்ல முயலும் படகுகள்: எச்சரிக்கும் ஆஸ்திரேலியா

மேற்கு ஆஸ்திரேலியா கடல் பகுதி அருகே 8 வெளிநாட்டினருடன் சென்ற ஆட்கடத்தல் படகு இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த 8 பேரையும் சட்டவிரோத குடியேறிகளாக ஆஸ்திரேலிய அரசு சந்தேகிக்கும் நிலையில், இவர்கள் சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனப்படுகின்றது. இதன் மூலம், 2013ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் கீழ் திருப்பி அனுப்பப்பட்ட 38வது ஆட்கடத்தல் படகு இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆட்கடத்தல் தடுப்பதற்கான தேவையையும் கடலில் மக்கள் தங்கள் உயிரை பணயம் ...

Read More »

சிட்னியில் அரங்கேறிய புகழேந்தி நாடகம்!

29.02 2020 அன்று சிட்னிவாழ் இளைஞர்களினால் நடாத்தப்பட்ட “புகழேந்தி” என்ற தமிழ் இலக்கிய நடையிலான, ஏறக்குறைய அறுபது பேருக்குமேல் பாங்குபற்றிய, ஒரு வரலாற்று மேடை நாடகத்தை கண்டுகளித்தேன். கண்டேன், களித்தேன், சிரித்தேன் அழுதேன் ஆனந்தமடைந்தேன். எமக்கென்றோரு வலுவான தளம் இல்லையே என்ற கவைலையோடும் அக்கறையோடும் திரைத்துறையில் பயணிக்க முயன்ற, ஆரம்பித்த எனக்கு, இதுவரை பயணம் செய்து பெரியதொரு வெற்றியடையாமல், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் வலுவான தளத்தை உருவாக்க முடியாமல் மறைந்த பலர்போல் எனது முயற்சியும் வாழ்க்கையும் முடிந்து விடுமோ என்ற ஐயத்தோடு இருந்த ...

Read More »

அவுஸ்திரேலிய இளம் பெண்ணின் தோளில் இருந்த மச்சத்தில் ஏற்பட்ட மாற்றம்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் உடலில் மச்சம் போன்ற மருவு ஏற்பட்ட மாற்றத்தை அவர் சாதாரணமாக எடுத்து கொண்ட நிலையில் ஸ்கேன் பரிசோனையில் அது தோல் புற்றுநோய் என்பது தெரியவந்ததால், அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். Courtney Mangan (33) என்ற பெண்ணுக்கு தோள் பகுதியில் மச்சம் போன்ற மருவு சிறுவயதிலிருந்தே இருந்தது. அவருக்கு 30 வயதான போது அந்த மருவில் மாற்றம் ஏற்படுவதை Courtney உணர்ந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் பின்னர் அரிப்பும் வலியும் அந்த பகுதியை சுற்றி ஏற்பட்டதால் மருத்துவமனையை நாடினார். அங்கு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு பரவத்தொடங்கியது வைரஸ்!

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இதுவரை 40 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ; ஒருவர் உயிரிழந்துள்ளார் எனினும் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் பிரட் ஹசார்ட் இதனை உறுதி செய்துள்ளார். ஈரானிலிருந்து வருவபவர்களிற்கான தடை நடைமுறைக்கு வருவதற்கு முதல் நாள் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நபர் ஒருவர் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கைகுலுக்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் !

கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் கைகுலுக்கிக்கொள்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நான் எனது நாளாந்த நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களை கைகுலுக்கிக்கொள்வதை நிறுத்தி விட்டு முதுகில் மெதுவாக தட்டுமாறு கேட்டுள்ளார் கைகுலுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். முத்தமிடும்போது எச்சரிக்கையாகயிருங்கள் எனவும் நியுசவுத்வேல்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Read More »

“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை”!

“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை,” என ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த குர்து அகதியான பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பூச்சானி ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்து வந்த நிலையில் பூச்சானியின் தற்போதைய கருத்து பதிலடியாக கருதப்படுகின்றது. முன்னதாக, நியூசிலாந்துக்கு வரும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூ சிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் ...

Read More »