அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பெண் தலைமை நீதிபதி நியமனம்

அவுஸ்ரேலியா உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக ஒரு பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சூசன் கீபெல் ஆவார். அவர் 15 வயதில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். பின்னர் தன் முயற்சியால் பள்ளிப்படிப்பை பகுதி நேர படிப்பாக படித்து தேறினார். தொடர்ந்து சட்டம் படித்தார். அப்போது வக்கீல் குமாஸ்தாவாகவும் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். குயின்ஸ்லாந்தில் 1987-ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு மாகாண உச்ச நீதிமன்றம் நீதிபதி ஆனார். மறு ஆண்டில் பெடரல் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்போது அவுஸ்ரேலிய ஐகோர்ட்டு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ன் பொதுப்போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இரண்டு மணிநேரத்துக்கான பஸ், Tram மற்றும் தொடரூந்துப் பயணங்களுக்கான Myki கட்டணம் 20 சதங்களால் அதிகரித்து $4.10 ஆக அறவிடப்படும் என்றும், அதேபோல் முழு நாட்களுக்குமான கட்டணம் $8.20 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க வருடாந்த adult Myki pass கட்டணம் 80 டொலர்களால் அதிகரிக்கப்படுகின்றது. அதேநேரம் concession ticket கட்டணம் 10 சதங்களால் அதிகரித்து $2.05 ஆக மாற்றமடைந்துள்ள அதேவேளை 5 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வழக்கத்திற்கு மாறான வானிலை

அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையில் வழக்கத்திற்கு மாறான வானிலை நிகழ்வுகள் அண்மைக் காலத்தில் ஏற்பட்டு வருகின்றன. 6,000க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்களும், டென்னிஸ் பந்து அளவுக்குப் பெரிதான ஆலங்கட்டிகளும் அந்த நிகழ்வுகளில் அடங்கும். குவீன்ஸ்லந்தை அந்த விநோத நிகழ்வுகள் உலுக்கின. அவுஸ்ரேலிய வானிலை ஆய்வகம் அதனால் எச்சரிக்கை விடுக்க நேர்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக, மோசமான வானிலை நிலவி வருகிறது. புதன்கிழமையன்று பெண் ஒருவர் மின்னலால் தாக்கப்பட்டதாகவும் பதின்ம வயதைக் கொண்ட ஒருவர் மரம் விழுந்து காயமடைந்ததாகவும் ABC News செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட ...

Read More »

அவுஸ்திரேலிய பப்புவா நியுகினி தடுப்பு முகாமில் மாவீரர் நாள் நிகழ்வு

அவுஸ்திரேலிய அரசால் பப்புவா நியுகினி  தீவில் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டுள்ளார்கள். மிகவும் நெருக்கடியான சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் என பலர் விடுதலை போராட்டத்தில் மரணித்துள்ளதாகவும் அவர்களை நினைவுகூருகின்ற சந்தர்ப்பம் கிடைத்தமை நல்ல விடயம் எனவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சமூக வலைத் தளங்கள் ஊடாக தமது ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 – 11 – 2016 அன்று தாயக நேரப்படி மாலை ஆறு மணிக்கு இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ...

Read More »

அவுஸ்ரேலியாவின் ஐந்து மாநிலங்களிலும் எழுச்சியுடன் மாவீரர் நாள் 2016

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பேர்த், பிரிஸ்பன், அடேலையிட், மெல்பேர்ண் பெருநகரங்களில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணர்வெழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர். சிட்னியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் அப்துல் ஜபார் கலந்து சிறப்புரையாற்றினார். தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இம்முறை எழுச்சியுடன் சிறப்பான முறையில் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நினைவெழுச்சிநாள் – 2016 – ஒஸ்ரேலியா- மெல்பேர்ண் தமிழீழத்தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் தமிழீழ மாவீரர்நாள்- 2016 நிகழ்வுகள் 27-11-2016 ஞாயிற்றுக்கிழமையன்று ...

Read More »

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஷர்ஜீல் கான், மொகமது ரிஸ்வான் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின் ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் 15-ந்தேதி பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூசிலாந்தில் ...

Read More »

அவுஸ்ரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம்

ustralia’s citizenship test ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம் கொண்டுவரப்படலாமென The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடியுரிமை பெறும் ஒருவர் அதற்கான பரீட்சை ஒன்றை எழுத வேண்டுமென்பது நாமறிந்த விடயம். 20 கேள்விகளைக் கொண்ட இப்பரீட்சையில் ஆஸ்திரேலியா சம்பந்தப்பட்ட பல பொது அறிவுக் கேள்விகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இனிவரும் நாட்களில் ஆஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சைக் கேள்விகளை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குடியுரிமைப் பரீட்சை எழுதும் ஒருவர் அவரது பின்னணி மற்றும் ...

Read More »

அவுஸ்ரேலியப் பயங்கரவாதியைத் தாயகத்திடம் ஒப்படைக்க முயற்சி

அவுஸ்ரேலியாவில் அதிகம் தேடப்பட்டுவந்த பயங்கரவாதியான நீல் பிரகாஷ், துருக்கியில் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரை தாயகத்திடம் ஒப்படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறுகிறது. ஐஸிஸ் பயங்கரவாதப் பிரிவுக்கு பிரகாஷ் ஆள் சேர்த்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஈராக்கின் மோசுல் நகரில் நடந்த சண்டையில் பிரகாஷ் கொல்லப்பட்டார் என்று கான்பெராவில் அறிவிக்கப்டபட்ட சில மாதங்களில் துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர். நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி பிரகாஷ் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தது. 23 வயது பிரகாஷ் சில வாரங்களுக்கு ...

Read More »

மகரந்த ஒவ்வாமையால் அவுஸ்ரேலியாவில் ஆறாவது நபர் மரணம்

அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரில், மகரந்த ஒவ்வாமையால், ஆஸ்துமா ஏற்பட்டதில், ஆறாவது நபர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியினால் ஏற்பட்ட கன மழையும், கடும் காற்றும் மகரந்த ஒவ்வாமை பரவுவதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கானோர் ஆஸ்துமாவால் அவதியுற்றனர். இன்னும் ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சுகாதாரப் பிரிவு பேச்சாளர் தெரிவித்தார். மூவரின் உடல் நிலை மோசமாய் இருப்பதாகவும் கூறப்பட்டது.

Read More »

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்- அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவுக்கு படகில் சட்டத்திற்கு புறம்பாக வந்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள் என அந்நாட்டு எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் எந்த வகையிலும் படகு வழியிலான அகதிகள் வரவுக்கு இடமளிக்காது என அவுஸ்ரேலிய அரசு முன்பே எச்சரித்திருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொற்றெல் விடுத்துள்ள எச்சரிக்கையில், அகதிகள் மீள் குடியேற்றம் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் ஒப்பந்தம் ஒரு முறை மட்டுமே இடம்பெறும் தீர்வாகும். ...

Read More »