அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் அகதிகளுக்கு பல மொழிகளில் எச்சரிக்கை!

சட்டவிரோதமாக படகுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்திரேலிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை கமாண்டரும் விமானப்படைத் துணைத் தளபதியுமான Stephen Osborne எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது; அவுஸ்திரேலியா தனது எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை, கடல்படை மற்றும் விமானப்படை ஆகியன அவுஸ்திரேலிய எல்லையை நோக்கிவரும் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்டுபிடித்து அவற்றை இடைமறிப்பதற்கான தமது நடவடிக்கைகளை ...

Read More »

உதவி செய்யப் போய் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கியவருக்கு உதவப் போன பெண் ஒருவர் மீது இன்னொரு வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெல்போர்ன் பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும்போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதன்மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அப்போது சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த Emily (வயது 27) என்னும் பெண் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு உதவி செய்வதற்காக ஓடிச் ...

Read More »

தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மெல்பேணில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆண்டுதோறும் ...

Read More »

ஆஸ்திரேலிய விவசாயிகளைப் பாதித்த விபரீத விளையாட்டு!

ஆஸ்திரேலியாவின் உணவுத்துறை, வேளாண்மை போன்றவற்றில் சமீபகாலத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது இது ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும் அனைவரையும் அச்சுறுத்தியிருக்கிறது கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவை. அப்படித்தான் நியூசிலாந்துக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து பல்வேறு சூப்பர் மார்க்கெட்களுக்கும் சென்றிருக்கின்றன. வாடிக்கையாளர் ஒருவர் நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கியிருக்கிறார். அதனை வீட்டுக்குச் சென்று சாப்பிடப் பார்த்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் பழத்தைக் கடித்தபோது அதனுள்ளே ...

Read More »

‘ஒசாமா’ என அழைத்தனர்! ஆதாரம் இல்லை!- ஆஸ்திரேலியா

ஒசாமா என ஆஸ்திரேலியா வீரர்கள் அழைத்தனர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் மொயீன் அலி. இவர் தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது கார்டிப் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் தன்னை ‘ஒசாமா’ என்று குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மொயீன் அலி குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருந்தது. ...

Read More »

அகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா

இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என  எம் ஐ ஏ அழைக்கப்படும் ரப் இசைப்பாடகி மாதங்கி( மாயா ) அருள்பிரகாசம்  வேண்டுகோள் விடுத்துள்ளார் கடந்த சில வாரங்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இது குறித்து கார்டியனிற்கு தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?

அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை Powerball நிறுவனம் தேடுகிறது. டஸ்மேனியாவில் உள்ள ஒருவருக்கே குறித்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவரது தொடர்பு விவரத்தை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் அவரை தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாது இருப்பதாக Powerball நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் மாத்திரமே முழுத் தொகையையும் வெற்றிகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற Oz Lotto jackpot சீட்டிழுப்பில் 30 மில்லியன் டொலர்களை வென்ற நியூ சவுத் வேல்ஸ் நபர் இதுவரை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மாம்பழத்திற்குள்ளும் தையல் ஊசி!

அவுஸ்திரேலியாவில் பழங்களுக்குள் ஊசிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மாம்பழத்தினுள் ஊசி காணப்பட்டதாக பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். ஏற்கனவே அவுஸ்திரேலியா முழுவதும் ஸ்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு ஸ்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பழங்கள் தொடர்பான பரபரப்பு மேலும் இரட்டிப்பானது. இதையடுத்து ஆப்பிள் பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிய பின்னணியில் தற்போது மாம்பழத்திற்குள் ஊசி காணப்பட்டதாக நியூ சவுத் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவினால் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள ஹோட்டலொன்றில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கண்கடி மற்றும் எரிச்சல் ஆகிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pullman Sydney Hyde Park ஹோட்டலில் உதவியாளர் ஒருவர் நீச்சல் தாடகத்துக்குரிய குளோரினுடன் இன்னொரு இரசாயன பதார்த்தத்தை கலந்துள்ளார். அப்போது குறித்த திரவக் கலவையிலிருந்து வெளிவந்த புகை 22 வது மாடியின் வழியாக பல்வேறு ...

Read More »

ஸ்ரோபெரி பழத்தில் ஊசியை மறைத்து வைப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஸ்ரோபெரி பழத்தில் மெல்லிய ஊசியை மறைத்து வைப்பது தீவிரவாதச் செயல் எனவும் இந்தச் செயலைச் செய்பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் (Scott Morrison) எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் விற்பனையாகும் ஸ்ரோபெரி பழங்களில் மெல்லிய ஊசியை நுழைத்து விற்கப்படுவதாகவும் இவற்றினை வாங்கி உண்ட சிலருக்கு தொண்டையிலும், வயிற்றிலும் ஊசி சிக்கி பெரும் விமைங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, ஸ்ரோபெரி பழம் சாப்பிடும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை ...

Read More »