உதவி செய்யப் போய் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கியவருக்கு உதவப் போன பெண் ஒருவர் மீது இன்னொரு வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெல்போர்ன் பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும்போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அதன்மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார்.

அப்போது சம்பவம் நடைபெற்றபோது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த Emily (வயது 27) என்னும் பெண் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபருக்கு உதவி செய்வதற்காக ஓடிச் சென்றுள்ளார்.

அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் குறித்த இளம் பெண் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இரண்டு குழந்தைகளின் தாயான Emilyயின் மரணம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.