அவுஸ்திரேலியமுரசு

இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி!

இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. ...

Read More »

நவுருவில் 12 வயது அகதிச்சிறுவன் உண்ணாவிரதப்போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்து தற்போது நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் இரண்டு வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருவதாக அங்குள்ள மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கடந்த நான்கு வருடங்களாக நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மேற்படி ஈரானிய சிறுவனின் நிலமை மிகுந்த கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவனை இந்த நிலையிலும்கூட ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு குடிவரவுத்துறை மறுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிறுவனின் குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக அனுப்பப்பட்டுவருகின்றவர்களின் ...

Read More »

2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட மெல்போர்ன்?

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்போர்ன் 02 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாக 7 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தைப் பின் தள்ளி வியன்னா நகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்திற்கு மெல்போர்ன் நகரம் பின் தள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள 140 பெரிய நகரங்களிலுள்ள மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், ஆகிய பல விடயங்களை அடிப்படை ஆதாரமாகக் வைத்து கொண்டு நகரங்கள் வரிசையாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

திருமணமான 2 நாளில் இளம் தம்பதியினருக்கு அதிர்ஷ்டம்!

அவுஸ்திரேலியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு அதிர்ஷ்ட லாபச்சீட்டு மூலம் 671,513 டொலர் பரிசு விழுந்துள்ளது. Cairns நகரைச் சேர்ந்த இளைஞனுக்கும் இளம்பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இருவரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த தம்பதிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது. இந்த நிலையில் இது எங்களுக்கு கிடைத்த திருமணப் பரிசுகளில் சிறந்த பரிசு இதுவென தாம் நினைக்கிறோம் என குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர் இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Read More »

100 மில்லியன் டொலர்கள் யாருக்கு ?

அவுஸ்திரேலியாவின் Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் 100 மில்லியன் டொலர்களை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது. Powerball அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பின் அடுத்த வாரத்திற்கான தொகை சுமார் 100 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.  எதிர்வரும் வியாழக்கிழமை இந்த சீட்டிழுப்பு இடப்பெறவுள்ளது. இந்த 100 மில்லியன் டொலர்களை யாராவது வென்றுவிடும் தருணத்தில் அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக தனிநபர் ஒருவரால் வெல்லப்பட்ட அதிகக் கூடிய தொகை என்ற சாதனை பதிவு செய்யப்படும். இதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு Hervey Bay -ஐச் சேர்ந்த தம்பதியர் 70 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஐந்து பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது!

5 அவுஸ்திரேலியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து பேரும் இனி அவுஸ்திரேலியா திரும்ப முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுரிமை கொண்ட குறித்த ஐவரும் மத்திய கிழக்கில் தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த ஐந்து பேரும் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) தெரிவித்துள்ளார். 20 – 30 வயதுகளில் இருக்கும் ஐந்து பேருடைய குடியுரிமையே இவ்வாறு ...

Read More »

போலி சான்றிதழ் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 22 பேருக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று வருகின்றனர். ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் அவுஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

Read More »

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை விமானத்தில் ஏற்ற வேண்டாம்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படும்போது அவர்களை Qantas மற்றும் Virgin விமான நிறுவனங்கள் தமது விமானத்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. குறித்த விமானங்கள் ஒப்புதல் வழங்கக் கூடாது என வலியுறுத்தும் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 60 ற்கும் மேற்பட்ட மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அகதிகள் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றின் கையொப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடுகடத்தும் செயற்பாட்டிற்கு தமது நிறுவனம் துணைபோகாது என கடந்த ஜுன் மாதம் Virgin Atlantic அறிவித்திருந்தது. அதேபோன்று அமெரிக்காவின் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்க வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து!

அவுஸ்திரேலியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 96,542 மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலுவதற்கென வழங்கப்பட்ட மாணவர் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 டிசம்பர் வரையான காலப் பகுதியிலேயே இவ்விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள், கொள்ளை, பாலியல், ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்கள் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் விசாக்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை Character and General Visa Cancellation சட்டமூலம் கடந்த ...

Read More »

மகனை குடும்பமே சேர்ந்து கொலை செய்து புதைத்த கொடூரம்!

அவுஸ்திரேலியாவில் கால்பந்து இறுதிப்போட்டி பார்ப்பதில் ஏற்பட்ட வாய்தகராறின்போது பெற்ற மகனையே கொலை செய்த தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Perth பகுதியை சேர்ந்தவர் Ernest Albert Fisher(67). இவருக்கு 23 வயதில் Matthew என்ற மகன் இருந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் AFL என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட லீக்கின் இறுதி போட்டியை பார்க்கும் பொழுது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவனது தந்தை Ernest திடீரென இரண்டு கூர்மையான கத்தியை எடுத்து, ...

Read More »