அவுஸ்திரேலியாவில் ஐந்து பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது!

5 அவுஸ்திரேலியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஐந்து பேரும் இனி அவுஸ்திரேலியா திரும்ப முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியக் குடியுரிமை உட்பட இரட்டைக் குடியுரிமை கொண்ட குறித்த ஐவரும் மத்திய கிழக்கில் தீவிரவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் குறித்த ஐந்து பேரும் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விழுமியங்களுக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) தெரிவித்துள்ளார்.

20 – 30 வயதுகளில் இருக்கும் ஐந்து பேருடைய குடியுரிமையே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.