போலி சான்றிதழ் மூலம் அவுஸ்திரேலியா சென்ற 22 பேருக்கு நேர்ந்த கதி!

அவுஸ்திரேலிய அரசிடம் போலி சான்றிதழ்கள் சமர்பித்தது தொடர்பாக தமிழம், கேரளாவை சேர்ந்த 22 மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சிலர் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று வருகின்றனர்.

ஒரு சிலர் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் 22 பேர் அவுஸ்திரேலிய அரசிடம் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என கண்டறியப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த 22 பேரின் விசாவை ரத்து செய்து அதற்கான நோட்டீசை மாணவர்களிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.