மகனை குடும்பமே சேர்ந்து கொலை செய்து புதைத்த கொடூரம்!

அவுஸ்திரேலியாவில் கால்பந்து இறுதிப்போட்டி பார்ப்பதில் ஏற்பட்ட வாய்தகராறின்போது பெற்ற மகனையே கொலை செய்த தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Perth பகுதியை சேர்ந்தவர் Ernest Albert Fisher(67). இவருக்கு 23 வயதில் Matthew என்ற மகன் இருந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் AFL என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட லீக்கின் இறுதி போட்டியை பார்க்கும் பொழுது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அவனது தந்தை Ernest திடீரென இரண்டு கூர்மையான கத்தியை எடுத்து, Matthew-வின் நுரையீரல் மற்றும் பெருங்குடல் பகுதியில் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே Matthew உயிரிழந்தார்.