அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் அகதிகளுக்கான இலவச யோகா பயிற்சி!

அகதிகளுக்கும் போரின் வேதனையிலிருந்து விடுபட விரும்புவோருக்கும் இலவச யோகா பயிற்சி வழங்கும் ஹேக்னி யோகா திட்டத்தினை இலண்டனில் பார்த்ததிலிருந்து, அவுஸ்ரேலியாவிலும் அப்படியான ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதென்று முடிவெடுத்துக் கொண்ட,  அவுஸ்ரேலிய  பெண்மணி டேனியல் ஃபெக் (Danielle Begg) அதைச் செயலிலும் காட்டிக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் டேனியல் ஃபெக் அவர்களின் நெறிப்படுத்தலில் நடத்தப்பட்டுவரும் இலவச அகதிகள் யோகா திட்டத்தில் கற்றுக்கொடுக்கப்படும் யோகக்கலை குறித்த சில காணொளிகளை கீழே காணலாம். இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள http://www.refugeeyogaproject.com/ என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.

Read More »

சிட்னியில் இருந்து துபாய் நோக்கி பயணமான கப்பல்!

Sea Princess எனும் ஆடம்பர கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க 10 நாட்கள் இரவும் பகலும் கடுமையாக போராடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து 1,900 பயணிகளுடன் Sea Princess எனும் சொகுசு கப்பல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் நோக்கி பயணமாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த கப்பலானது இந்திய பெருங்கடல், அரேபிய கடல், ஏடன் வளைகுடா மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக பயணம் மேற்கொண்டபோது சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்காமல் இருக்க கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.   குறித்த பகுதிகள் ...

Read More »

வீட்டுக்குள்ளிருந்தே உலகம் சுற்றி வந்த அவுஸ்ரேலியர்!

அவுஸ்ரேலியாவில் கடந்த 20 ஆண்டுகளாக பயம் தொடர்பான பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணி ஒருவர் அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து சாதித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 43 வயது ஜாக்கி கென்னி, கடந்த 20 ஆண்டுகளாக agoraphobia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பொது இடங்களைக் கண்டால் இவருக்கு ஒருவித பயம் வந்துவிடும். இந்த இடம் ஆபத்தானது, பாதுகாப்பு இல்லாதது, விரைவாக வீட்டுக்கு ஓடிவிட வேண்டும் என்று தோன்றும். வீட்டிலிருந்து 2 நிமிட தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு செல்லும்போது, 23-வது வயதில் முதல் முறையாக இந்தப் பயம் ...

Read More »

சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை திருப்பி அனுப்புவோம் – அவுஸ்ரேலியா

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு வந்த 13 இலங்கையர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய தூதுரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பி அனுப்பப்பட்ட 13 பேரும், அண்மைய நாட்களில், கடலில் இடைமறிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ‘குடியுரிமை பெறாத இவர்கள் அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு கடப்பாடுகளுக்கு உட்பட்டவர்களல்ல. அவுஸ்ரேலியாவில் சட்டரீதியாக தங்கியிருக்க தகுதியற்றவர்கள். சட்டரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவில் தங்கியிருப்பவர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்ய முனையும் எவரும், அவுஸ்ரேலியாவில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சிறிலங்கா இளைஞன் விபத்தில் மரணம்!

அவுஸ்ரேலியா மெல்பேர்ண் நகரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறிலங்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரத்தில் பணிபுரிந்து வந்த இந்த நபர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. களுத்துறை மாவட்டம் அளுத்கம என்ற இடத்தைச் சேர்ந்த தரிந்து குரே என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மோட்டார் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையினால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read More »

அவுஸ்ரேலியாவில் வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமம்!

சிட்னி நகரின் மத்தியில், சுற்றிலும் வானளாவிய கட்டடங்கள். வளமும் வாழ்வும் ததும்பும் நகரப்பகுதியில், வீடில்லாதோருக்குத் தனியொரு கிராமமே உருவாகியுள்ளது. நகரின் சொகுசு வட்டாரமான மார்ட்டின் ப்ளேசில் 50க்கும் மேற்பட்ட வீடில்லாதோர் கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். வீடில்லாப் பிரச்சினையில் அதிகாரிகள் போதுமான கவனம் செலுத்தாதது இந்நிலைமைக்குக் காரணம் என்று நகர மேயர் க்லோவர் மூர் கருதுகிறார். வீடில்லாதோரை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்த நகர அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய திருவாட்டி மூர், கட்டுப்படியாகும் விலையில் வீடு வாங்க அரசாங்கம் உதவலாம் எனக் கூறினார். சிட்டியில் ...

Read More »

சிட்னி மெல்பேர்ணில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்கள்!

தாயக மக்களின் உரிமைக்கான அடிப்படைகளை இல்லாதொழிக்கின்ற அரசியல் செல்நெறிகளை நிராகரித்து, தமிழ் மக்களின் நீடித்த கௌரவமான பாதுகாப்பான அரசியல் செல்நெறிகளுக்கு வெளிப்படையாக புலம்பெயர்ந்த உறவுகளை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார். அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர் மெல்பேர்ண் மற்றும் சிட்னி நகரங்களில் நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல்களில் பங்குகொண்டு கருத்துரை வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மெல்பேர்ணில் வேலை நாளாக இருந்தபோதும் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலிலும், சிட்னியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதும் ஆர்வத்துடன் பலர் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கால்பதிக்கும் அமேசன்: பலருக்கு வேலைவாய்ப்பு!

இணைய விற்பனையில் கொடிகட்டிப்பறக்கும் அமேசன் நிறுவனம் அவுஸ்ரேலியாவில் கால் பதிக்கிறது. அமேசன் நிறுவனத்தின் Warehouse ஒன்று மெல்பேர்னில் திறக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Dandenong தெற்கில் 24,000 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்படும் Warehouse-அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கு பணிபுரிவதற்கான வாய்ப்பு, நூற்றுக்கணக்கான அவுஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு வர்த்தக நிறுவனங்கள் பல அமேசன் ஊடாக தமது பொருட்களை விற்பனை செய்துவரும் நிலையில்,அவுஸ்ரேலியாவுக்கான விநியோகங்கள் அனைத்தும் இந்தப் புதிய Warehouse ஊடாக நடைபெறும் என தெரியவருகிறது. இங்குள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரிய ...

Read More »

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் காணாமல் போனவர்களை தேடுகிறது அமெரிக்க கடற்படை!

அவுஸ்ரேலிய கடல்பகுதியில் அமெரிக்காவின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். அவுஸ்ரேலியஎல்லைப்பகுதியில் அமெரிக்காவிற்கு சொந்தமான ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாக அமெரிக்க கடற்படையினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் ஒக்கினாவாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்க விமானம், அவுஸ்ரேலியாவின் கிழக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ...

Read More »

அவுஸ்ரேலிய கடலில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்தது!

கூட்டு பயிற்சியின்போது அவுஸ்ரேலிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் மாயம் ஆனார்கள். அவுஸ்ரேலியா வின் குவின்ஸ்லேண்ட் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா  கடற்படையினர் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் எம்.வி.-22 ஆஸ்பிரே என்ற போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த பயிற்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஒரு போர் விமானம், விமானம் தாங்கி கப்பலில் தரை இறங்க முயன்றது. அப்போது அந்த விமானம் ...

Read More »