அவுஸ்திரேலியமுரசு

வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்ய அவுஸ்திரேலியா பயணமான குற்றப் புலனாய்வுக் குழு!

ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களக் குழு ஒன்று அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவல் துறை பரிசோதகர் மற்றும் உபகாவல் துறை பரிசோதகர் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் ஒருவாரம் தங்கியிருந்து மெல்போர்னில் உள்ள ஊடகவியலாளர் கீத் நொயரிடம் வாக்கு மூலம் பெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கீத்நொயார் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், இராணுவ தலைமை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஓய்வு பெற்ற அமல் ...

Read More »

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தகவல் பரிமாற்றம்!

புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதுடன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதும் நடந்துவருகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது. TPV எனப்படும் தற்காலிக விசா காலாவதியாவதற்கு முன்னரே இந்த விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் குடியுரிமை பெறும் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் இறுக்கமாக்கப்படவுள்ளன. இந்த நிலைமைகளால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. இவை பற்றியும் மற்றைய பாதுகாப்பு விசா ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகே வசித்து வந்தவர் மவுலின் ரதோட் (வயது 25). இந்திய மாணவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள கல்லூரி ஒன்றில் கணக்கியல் துறையில் பயின்று வந்தார். இவருக்கும், மேற்கு மெல்போர்னின் புறநகர் பகுதியான சன்பரியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனியாக வசித்து வரும் அந்த ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்!

ஆஸ்திரேலியாவின் வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில், கொசுக்களை ஒழிக்கும் பெரிய அளவிலான பரிசோதனைக்கு, வெற்றி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆராய்ச்சி அமைப்பும், ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகமும், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’டின் கொசுக்கள் ஒழிப்பு ஆராய்ச்சி அமைப்பான, ‘வெரிலி’யும் இந்த வெள்ளோட்டத்தை அண்மையில் மேற்கொண்டன. ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை. எனவே, இனப்பெருக்கத் திறன் நீக்கப்பட்ட ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் ஏராளமாக உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வெரிலி உருவாக்கியது. தவிர, ஆய்வகத்தில் உருவாகும் பெண் கொசுக்களிலிருந்து, ஆண் கொசுக்களை மட்டும் பிரித்தெடுக்க, ரோபோக்களை வெரிலி பயன்படுத்துகிறது. ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சஃபாரி சுற்றுலா!

கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சஃபாரி சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய வசதி கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றலாப் பயணிகளுக்கு அறுகம் குடா மற்றும் திருகோணமலை போன்ற நகரங்களில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மேலதிகமாக, பானம பகுதியிலும் சஃபாரி சுற்றுலா மேற்கொள்ள முடியும். அறுகம் குடாவிலிருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாக பானம திகழ்வதுடன் கொழும்பிலிருந்து 8 ...

Read More »

காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த பெண்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே கண் எரிச்சல் தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அவர் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார். கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாக கூறினார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. எனவே கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ...

Read More »

விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம்!

நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் வர முன்னரே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிரந்தர உரிமையினை ஒருவருக்க வழங்குவதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவின் விழுமியங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே அவர் தேர்வுகளை எதிர்க்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரைக்கும் தற்போது உள்ள நடைமுறையின் படி சில வருடங்கள் வாழ்ந்த பின் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ...

Read More »

மனுஸ்-நவுறு தடுப்பு முகாம்களின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு போராட்டம்!

சட்டவிரோதமாக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு லேபர் கட்சி முடிவு செய்ததன் 5வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் அகதிகள் நல அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் அமைதிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு மனுஸ் மற்றும் நவுறு தடுப்பில் முகாமில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இதுவரை 12 உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1600 பேர் குறித்த தீவுகளில் தங்க ...

Read More »

திலீபன் உட்பட 18 பேரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென்னாசிய விவகார ஆய்வாளரும், கல்வியாளருமான பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன், அவரின் மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு ...

Read More »

பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல் பாவனை நிறுத்தம்!

ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது உணவகங்கள் அனைத்திலும் plastic straw-பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்களை முற்றாக தடைசெய்துவிட்டு காகிதத்தால் ஆன உறிஞ்சுகுழல்களை அறிமுகம் செய்யவுள்ளதாக McDonald’s நிறுவனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு உணவகங்களில் பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் McDonald’s நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் பாவனையை தடைசெய்வதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும், 2020-ஆம் ஆண்டுக்கு முதல் ஆஸ்திரேலியாவிலுள்ள தங்களது 970 கிளைகளிலும் பிளாஸ்டிக் பாவனையை முற்றாக களைவது தங்களது நோக்கம் என்றும் McDonald’s தெரிவித்துள்ளது. ...

Read More »