குமரன்

ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளில் நடாத்தப்படவுள்ள இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினை யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள்கள் தொடர்பில் உண்மை நிலையினை வெளிக் கொண்டுவரும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதம் இன்றி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். சகல ஊடகவியலாளர்களும் தமது பணிகளை ...

Read More »

பிலிப்ஸ் உருவாக்கியுள்ள சிக்கன ‘துபாய் விளக்குகள்!’

இப்போது உள்ளதைவிட மிகவும் சிக்கனமான எல்.இ.டி., விளக்குகளை உருவாக்க முடியுமா… பிலிப்ஸ் நிறுவனம், துபாய் அரசு, மாநகராட்சியுடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சியில், அதி சிக்கனமான புதிய எல்.இ.டி., விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், துபாயில் நடந்த, ‘நீர், சக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி’யில் இந்த புதுமை விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘துபாய் விளக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எல்.இ.டி., விளக்குகள், குண்டு விளக்குகளை விட, 90 சதவீதம் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி பிரகாசமாக எரிகின்றன. அதுமட்டுமல்ல, இவற்றின் ஆயுளும், 15 மடங்கு அதிகம்.துபாய் நகரின் மின் ...

Read More »

யுவன் இசையில் தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் இசையில் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ். ‘கான்’ படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிக்க கெளதம் மேனன் மற்றும் மதன் தயாரித்து வருகிறார்கள். ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் பேய் படம் இது. முழுப்படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்காக நீண்ட ...

Read More »

அவுஸ்ரேலியாவில் நிற வெறி!!!

20 வயது இளம்பெண்ணான ஜோசி அஜாக், போரின் காரணமாக 2004 ஆம் ஆண்டு சூடானிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு அகதியாக தஞ்சம் புகுந்தவர். தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் ஜோசி அஜாக், குவின்ஸ்லாண்டில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன் அங்கு காபி குடிக்க வந்த வெள்ளையின பெண்ணிடம் ஜோசி அவரின் தேவை குறித்து கேட்க, அவரோ வெள்ளையின பெண்ணை அனுப்பும்படி கேட்டுள்ளார். இது குறித்து அவுஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள ஜோசி, “அப்படி அந்த பெண் சொன்னதும் ...

Read More »

வரிஏற்புச் செய்து பலகோடி பெறுமதியான வாகனக்கொள்வனவு

தீர்வை வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்த 66 பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்ரசுக் கட்சியின் தலைவரான சேனாதிராஜா உள்ளிட்ட உறுப்பிர்களே தீர்வை வரி இன்றி கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்தவர்களின் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். இந்தப் பட்டியல் வெளியிடப்படும் முன்பதாக சில மாதங்களிற்கு முன்பதாக தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வியாபாரியுமான ஒருவர் சுமார் 1750 ரூபாவினை மட்டும் வரிப்பணமாகச் ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி

கடந்த 2014-ம் ஆண்டு பந்து தாக்கியதில் மரணம் அடைந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த சாட்சி விசாரணையில் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய போது பந்து தாக்கியதில் மரணம் அடைந்தார். தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய போது, நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பயங்கரமான பவுன்சர் பந்து அவரை ஒரேயடியாக சாய்த்து ...

Read More »

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹினின் கண்டுபிடிப்பு

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹின், உருளைக் கிழங்குகளில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். பொட்டேடோ மேஜிக் கம்பெனியின் நிறுவனரான ஆண்ட்ரூ டைஹின், 12 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். “சீஸ், பொட்டேடோவை இணைத்து சாட்டோ என்று பெயரிட்டிருக்கிறேன். பாலாடைக்கட்டியைப் போலவே இருக்கும், உருகவும் செய்யும். இதில் வேறு எந்த ரசாயனங்களும் சேர்க்கவில்லை. உருளைக்கிழங்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தி, சாட்டோவை உருவாக்கியிருக்கிறோம். பாலாடைக் கட்டியில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்யலாம். சாட்டோவை வைத்து பாலாடைக்கட்டியாகவும் பாலாகவும் பயன்படுத்தலாம். ஐஸ்க்ரீம்களில் சேர்க்கலாம். ...

Read More »

பாதுகாப்பான ‘சின்ன’ முகவரி

நீளமான இணைய முகவரிகளைச் சுருக்கமான வடிவில் பகிர்ந்துகொள்ள உதவும் முகவரி சுருக்கச் சேவைகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக ‘தின்ஃபி.காம்’ அறிமுகமாகியுள்ளது. இந்தச் சேவை மூலம் இணைய முகவரிகளைச் சுருக்கும் போது அதற்கான பாஸ்வேர்டையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு சுருக்கப்பட்ட முகவரியுடன் பாஸ்வேர்டையும் சேர்த்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த பாஸ்வேர்டு உள்ளவர்கள் மட்டுமே சுருக்கத்தின் பின்னே உள்ள இணையப் பக்கத்தை அணுக முடியும். குழுவாகச் செயல்படும்போது, புதிய திட்டங்கள் தொடர்பான இணையத் தகவல்களை இப்படி பாஸ்வேர்டு பாதுகாப்புடன் பகிர்ந்துகொள்ளலாம். ...

Read More »

என்னை இயக்குவது நகைச்சுவை! – நடிகை வினோதினி

எங்கேயும் எப்போதும்’படத்தில் தங்கையின் காதலை அங்கீகரிக்கும் அக்கா கதாபாத்திரத்தில் தொடங்கி, சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஜூனியர் வக்கீலாக வந்து கவர்ந்தது வரை, பல வண்ணக் கதாபாத்திரங்களில் யதார்த்தக் கலைஞராக மிளிர்பவர் வினோதினி. இவரைத் திரைப்படக் கலைஞராகத் தெரிந்த அளவுக்கு தீவிர நாடகாசிரியராக, நாடக இயக்குநராக, நடிப்பைச் சொல்லித்தரும் ஆசிரியராகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி… நாடகம் வழியே திரைப்படத்துக்கு வந்தவர் நீங்கள் என்று தெரியும். அந்தப் பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அதிக சுதந்திரம் தரும் ஒரு குடும்பத்தில் பிறந்து ...

Read More »

சிறீலங்கா அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது

அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் நிகழ்த்திய உரையில் இருந்து இதனை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என, அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை கூட்டு எதிர்க்கட்சினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த அரசு மீது தற்போது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

Read More »