சிறீலங்கா அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளது

அரசுக்குள் முரண்பாடுகள் பூதாகரமாக வெடித்துள்ளதாக, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன் தினம் நிகழ்த்திய உரையில் இருந்து இதனை மக்கள் மிகத் தெளிவாக புரிந்துகொண்டிருப்பார்கள் என, அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை கூட்டு எதிர்க்கட்சினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்த அரசு மீது தற்போது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.