வடக்கு கிழக்கு மக்கள் அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களும், பெரும்பான்மை சிங்கள மக்களும் இருவேறு ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பலி!
அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக கார் வெப்பத்திற்கு பலியாகியுள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kerri-Ann Conley (27) என்கிற தாய், நேற்றைய தினம் தன்னுடைய இரண்டு குழந்தைகளான டார்சி கான்லி (2) மற்றும் சோலி-ஆன்(1) ஆகியோரை 31 செல்சியஸ் வெப்ப நிலையில் காரில் மறந்துவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டார். நீண்ட நேர உறக்கத்திற்கு பின்னரே இரண்டு குழந்தைகளும் காரில் இருப்பது Conley-ன் நினைவுக்கு வந்துள்ளது. வேகமாக காருக்கு சென்ற அவர், இரண்டு குழந்தைகளும் சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். ...
Read More »இலங்கை தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்!
இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு ...
Read More »நல்லிணக்கம் தோன்ற இறைவனிடம் கையேந்துவோம்!
மன்னார் மாந்தை, திருக்கேதீஸ்வரம் வளைவு சம்பந்தமாக ஊடகங்கள் எதையும் வெளியிடலாம். இப் பிரச்சினையை ஒரு பெரும் பிரச்சினையென சித்தரித்து காட்டலாம். ஆனால் நாம் மதங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே செயல்பட்டு வருகின்றோம். எந்த பிரச்சினைகள் தோன்றினாலும் அவைகள் தீர்க்கப்பட்டு சமயங்களுக்கிடையே நல்லிணக்கம் மலர வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றித்து இறைவனிடம் வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் அருட்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 21ஆம் திகதி முதல் மூன்று ...
Read More »ஷானி அபேசேகர தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்! – கோத்தாபய
குற்றவியல் விசாரணை திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தன்னிச்சையாக புலனாய்வு அதிகாரிகளையும் கடற்படையின் கட்டளை அதிகாரிகளையும் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளார் என்று சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தர்மரத்ன தேரருடனான சந்திப்பின் போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஷானி அபேசேகர அதிகாரிகளை கைது செய்து துன்புறுத்தி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளார். ஷானி அபேசேகர இவ்வாறான கைதுகளை மேற்கொள்ளும் போது அரச சாரா நிறுவனங்கள் அவரை மனித உரிமைகள் காப்பாளராக பாராட்டியதுடன் ...
Read More »எனக்கு அப்படிப்பட்ட காதலன் வேண்டாம்! – பனிடா சந்து
விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நாயகியாக நடித்துள்ள பனிடா சந்து, தனது காதலன் அப்படி இருக்க கூடாது என தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ’ஆதித்ய வர்மா’. ஈ4 எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம், தனது மகன் துருவ்வை நாயகனாக அறிமுகம் செய்கிறார். ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த கிரிசாய்யா ’ஆதித்ய வர்மா’வின் இயக்குநரானார். ’அக்டோபர்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் ...
Read More »வதந்திகளை நம்பாதீர்கள் – யோகி பாபு
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, என்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினியுடன் ‘தர்பார்’, சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவசாயி’ என யோகி பாபுவின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. கதையின் நாயகனாக ‘மண்டேலா’ உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே ‘சத்யம்’ இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். இந்நிலையில் யோகிபாபு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த பெண் யோகிபாபுவின் ...
Read More »ஐ.தே.க. பிளவை நோக்கி நகர்கிறதா?
1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது. எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியலும் ஐக்கிய ...
Read More »வாசுதேவவா? மைத்திரியா?
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் நியமித்ததுடன், (15) வெள்ளிக்கிழமை 16 பேர் ...
Read More »பதவிக்கு யாரை முன்மொழிவது ?
எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு யாரை முன்மொழிவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினுள் தொடர்ந்தும் இழுபறியான நிலைமை நீடிக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அணியினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு முன்மொழிந்து கடிதம் அனுப்பியுள்ள நிலையில் 45 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் சஜித் பிரேமதாஸவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்து கடிதமொன்றை அனுப்பியிருந்தனர். பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் அதன் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal