குமரன்

எம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்?

விளம்பரம், வருமானம்; இந்த இரண்டுதான் எல்லா டெக் நிறுவனங்களின் எல்லை மீறலுக்கும் காரணம். அதேதான் கூகுளின் விஷயத்திலும். மொபைலின் GPS-ஐ ஆஃப் செய்துவைத்திருக்கும் சமயங்களிலும், மொபைலுக்கு லொகேஷன் சார்ந்த நோட்டிஃபிகேஷன்கள் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா. ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் அனைவரும், ஏதேனும் ஒரு சமயத்தில் இதைக் கண்டிருப்பர். நம்முடைய மொபைல் போனின் இருப்பிடத்தை, மொபைல் அப்ளிகேஷன்கள் அறிந்துகொள்வதற்கு உதவும் டூல்தான் GPS. கூகுள் மேப்ஸ், வெதர் ஆப்ஸ், டாக்ஸி ஆப்ஸ் போன்ற அப்ளிகேஷன்கள் இதன் உதவியுடன் நம்முடைய லொகேஷனை மேப் செய்கின்றன. எனவே, GPS ஆன் செய்து ...

Read More »

மைத்திரி, ரணில் பெயர்­களை பயன்­ப­டுத்தி நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு மன்னிப்பு இல்லை!!

ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு எந்­த­வித மன்­னிப்பும் இல்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்தார். பிர­தமர் அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரி­வ­தா­கவும் சிரேஷ்ட அமைச்சர் ஒரு­வ­ருக்கு மிகவும் நெருக்­க­மா­னவர் எனவும் தெரி­வித்து, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளித்து நிதி மோசடி புரிந்த நபர் ஒருவர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அதி­கா­ரி­க­ளினால் கடந்­த­வாரம் அம்­பாறை உகன பிர­தே­சத்தில் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து ...

Read More »

நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதி உதவி!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். முப்படைகளின் பிரதானி கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வருடம் பொலிஸாரிடமிருந்து ...

Read More »

நவுருவில் 12 வயது அகதிச்சிறுவன் உண்ணாவிரதப்போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்து தற்போது நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் இரண்டு வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருவதாக அங்குள்ள மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கடந்த நான்கு வருடங்களாக நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மேற்படி ஈரானிய சிறுவனின் நிலமை மிகுந்த கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவனை இந்த நிலையிலும்கூட ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு குடிவரவுத்துறை மறுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிறுவனின் குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக அனுப்பப்பட்டுவருகின்றவர்களின் ...

Read More »

நாயாறு எரியூட்டல்!

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒன்றரை மாதங்களுக்குள், வடக்கு கடற்கரையோரங்களில் தொழில் உபகரணங்கள், படகுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டி அழிக்கப்பட்ட, மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கின் கட்டைக்காடு, தாளையடிப் பகுதிகளில் ஏற்கெனவே ...

Read More »

2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட மெல்போர்ன்?

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்போர்ன் 02 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாக 7 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தைப் பின் தள்ளி வியன்னா நகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்திற்கு மெல்போர்ன் நகரம் பின் தள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள 140 பெரிய நகரங்களிலுள்ள மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், ஆகிய பல விடயங்களை அடிப்படை ஆதாரமாகக் வைத்து கொண்டு நகரங்கள் வரிசையாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம்…!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், குற்றப்புலனாய்வு பிரிவு, எதிர்வரும் 17 ஆம் திகதியன்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளது. ஊடகவியலாளர் கீத்​ நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவிடம்,இதற்கு முன்னரும் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

45 நாட்கள் உணவின்றி தவித்த ஈழப் பெண்!

45 நாட்கள் உணவின்றி தவித்த ஈழப் பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உச்சகட்ட உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்கள் தமிழகத்திறக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்ட மண்டபம் அகதிகள் முகாமில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரிசி இலவசமாக ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. மேலும் ...

Read More »

அப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன்!

வில்லனாகவும் கதாநாயகனாகவும் நடித்த சத்யராஜ், இனியும் சம்பாதிக்க அப்பா வேடத்தில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார். ‘‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கிறீங்களே‘‘ என்ற தலைப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு நடித்து முன்னேறியவர் சத்யராஜ் என்று அண்ணன் சிவகுமார் சொல்வார். முதலில் நடிக்க வந்த எனக்கு ...

Read More »

பொதுமக்களின் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க திட்டம்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேலும் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும், பொதுமக்களின் 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் அரச மற்றும் பொதுமக்களின், 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான அனுமதி கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »