குமரன்

ஆஸ்திரேலியாவுக்கும் பரவிய கொரோனா வைரஸ்: 78 வயது முதியவர் பலி!

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 78 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ...

Read More »

உலகம் முழுவதும் ”கொரோனா” வீழ்ச்சி!

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து ”கொரோனா” என்ற பெயர் உடைய மதுபானத்தின் விற்பனை  குறைவடைந்துள்ளது. இதனால்  இவ்  மதுபானத்தின் சந்தைப்படுத்தல்  உலகம் முழுவதும்  சரிவை கண்டுள்ளது. ”கொரோனா” மதுபான தயாரிப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.  

Read More »

கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் முதல் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்துலுக்கு ஆளாக்கி வரும் கரோனா வைரஸ் அமெரிக்காவையும், ஆஸ்திரேலியாவையும் விட்டு வைக்கவில்லை. இரு நாடுகளிலும் கரோனா வைரஸுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, ஈரான், இத்தாலி, மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று அதிபர் டொனால்ட் உத்தரவிட்டுள்ளார். கரோனா வைரஸ் பலருக்கும் பரவியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, வாஷிங்டன் மாகாணத்தில் அவசர நிலையை பிறப்பித்துள்ளனர். சீனாவின் ஹுபே மாகாணத்தில், வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு சீனாவில் மட்டும் 2900 பேர் உயிரிழந்துள்ளனர், 85 ஆயிரம் ...

Read More »

பத்திரிகை நிறுவன பணிப்பாளருக்கு பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பாணை!

வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான சக்திவேல்பிள்ளை பிரகாஸ் என்பவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செய்தி ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வருமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நிறுவனப் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

Read More »

நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும்?

19 ஆவது அரசியலமைப்புக்கு அமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை ஆண்டுகள் கடக்கின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு செல்கின்றது. இதனடிப்படையில் நாளை அல்லது அதற்கு பின்னரான நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலை அடுத்து உருவான தற்போதைய நாடாளுமன்றம் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி கூடியது . இதனடிப்படையில் 8வது ...

Read More »

ஜெனிவா: எப்பவோ முடிந்த காரியம்!

கடைசியாக நாங்கள் நினைத்தது எதுவோ அதுவே நடந்து விட்டது. 2015ம் ஆண்டு ஜெனிவாவில் இலங்கையின் அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானத்தில் இருந்து இலங்கை ஒரு தலைப்பட்சமாக வெளியேறி விட்டது. ஐந்தாண்டுகளிற்கு முன்னர் இலங்கை இணை அனுசரணை வழங்கும் போது உயர்ந்த எங்கள் நெற்றிப் புருவங்கள், இன்று அதே ஜெனிவா முன்றலில் வைத்து ஐநா தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சண்டித்தனமாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததோடு ஓய்வு நிலைக்கு வந்து விட்டன. தமிழர்களிற்கு தாங்கள் பெரிய கெட்டிக்காரன்கள் என்று இருக்கும் மிதப்பு கொஞ்ச நஞ்சமல்ல. தமிழர்களின் இந்த ...

Read More »

‘சூர்யாவுடன் நடிப்பது என்பது எனது கனவு’!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர், ‘எங்க தலயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவரும் மீண்டும் சூர்யாவுடன் இணைவது எப்போது என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்துடன் வீரம் படத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ ...

Read More »

சினம்கொள் – ஈழத்துத் தமிழ்த்திரைப்பட காட்சிகள் பற்றிய விபரம்: அவுஸ்திரேலியா!

எமது மக்களின் வாழ்வையும் உறைந்துபோயுள்ள உன்னதமான உணர்வுகளையும் திரையில் கொண்டு வருகிறது ‘சினம்கொள்’ என்ற முழுநீள திரைப்படம். ஈழத்து தமிழ் கலைஞர்களால் உருவாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரு ஆதரவுடன் வெளியீடப்பட்ட இத்திரைப்படம், ஒஸ்ரேலியாவின் பெருநகரங்களிலும் வெளியாகின்றது. இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம், உங்கள் முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். நன்றி. To book your tickets, contact the below numbers:- MELBOURNE READING CINEMAS DANDENONG 29-02-2020 SATURDAY 6PM ☎Ragu 0406 429 107 ...

Read More »

மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்காெலை!

கொழும்பு – கொம்பனித்தெரு வீதியில் உள்ள சுப்பர் மார்க்கட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 58 வதுடயை நபர் ஒருவரே இவ்வாறு இன்று (29) மதியம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Read More »

அச்சுறுத்தலாக மாறுகின்றதா முஸ்லிம்களின் பாதுகாப்பு ஆடை?

உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள  இனவாத சக்திகளும்  அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் அன்றாடம் காண்கின்றோம். இந்தியா, இலங்கை தொட்டு மேற்குலக நாடுகள் வரை, பல தேசங்களின் அரசியல், இனவாதத்தின் முக்கிய மூலதனமாக, முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் இனவாத சம்பவங்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், யார் ஜனாதிபதியாகப் பதவி வகித்தாலும் இந்த நாட்டில் இனவாதத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது; ...

Read More »