பத்திரிகை நிறுவன பணிப்பாளருக்கு பயங்கரவாத விசாரணை பிரிவு அழைப்பாணை!

வவுனியாவை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான சக்திவேல்பிள்ளை பிரகாஸ் என்பவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வருமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகை நிறுவனப் பணிப்பாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.