Tag Archives: ஆசிரியர்தெரிவு

தொழில் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வடமராட்சி மீனவர்கள்!

வடமராட்சி கடற்தொழில் சமாசத்துக்கு உள்பட்ட மீனவர்கள் எவரும் கடற்தொழிலுக்கு செல்லமாட்டார்கள். வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடலட்டை தொழில் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவற்றைத் தடுக்க கோரி கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்டோரிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாமையைக் கண்டித்தும் வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்துக்கு உள்பட்ட மீனவர்கள் இந்த தொழில் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு வடமாகாண கடற்தொழிலாளர்கள் அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என்று வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More »

மந்த்ரா ஹோட்டலில் உள்ள ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று…..

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் வைக்கப்பட்டுள்ள மந்த்ரா ஹோட்டலில் உள்ள ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அகதிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த ஜூலை 8ம் தேதி ஹோட்டலில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை 4யிலிருந்து அந்த நபர் இந்த ஹோட்டலில் வேலை செய்யவில்லை எனவும் ஆஸ்திரேலிய உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டல் அகதிகள் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு வருகின்றது. “அனைவரும் பீதியில் இருக்கின்றனர்….யாருக்கேனும் இங்கு தொற்று ஏற்பட்டால் எங்கள் அனைவருக்கும் ...

Read More »

பிரியா நடேசன் பேர்த் மருத்வமனையில் அனுமதி

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும்  தமிழ் குடும்பமான பிரியா நடேசன் குடும்பத்தில் பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியதையடுத்து பிரியா தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள எஸ்.பி.எஸ். தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சுமார் 3 வாரகாலமாக கடுமையான சுகவீனமடைந்த நிலையில் அவர் இருந்த நிலையிலேயே இன்றைய தினம் மருத்துவமனைக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்மஸ் தீவில் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும், கடுமையான போராட்டங்களின் பின்னரே அவரை சிகிச்சைக்காக ...

Read More »

கலாநிதி குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுவது என்ன?

பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின் சுயாதீன தன்மை இராணுவ நலன்களுக்கு மேலானது அல்ல என்ற நிலையே இந்த நாட்டில் காணப்படுகின்றமையை யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குருபரனின் ராஜினாமா எடுத்துக்காட்டுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் கவலையும் விமர்சனமும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முறிகண்டியில் உள்ள சாந்தபுரத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், இதேபோன்ற ஒரு நிலைமை தான் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராகப் பதவி வகித்திருந்த ...

Read More »

குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்…..!

தமிழ் மக்களை அச்சத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதில் கோட்டாபயவின் அரசு தீவிரமாக இருப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமராட்சி-கலிகையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் மிருசுவில் படுகொலையாளி இன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு குற்றமிழைத்த பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குற்றமே செய்யாத பல தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் வாடுகின்றனர். நல்லாட்சி அரசில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாத தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர், இன்று ...

Read More »

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகம் விற்பனையில் சாதனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) விமர்சித்து அவரது அண்ணனின் மகளான மேரி ட்ரம்ப் எழுதியுள்ள புத்தகம் ‘Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man‘ ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்த குறித்த புத்தகமானது அன்றைய தினமே முற்பதிவு விற்பனை, இ-புத்தகம் மற்றும் ஓடியோ என 9,50,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப் புத்தகத்தில் ட்ரம்ப்பை மோசமானவராக விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பு மையங்களில் சுகாதார, பாதுகாப்பு சட்டங்கள் மீறப்படுகின்றனவா?

கொரோனா பெருந்தொற்று பரவிவரும் இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவின் குடியேற்ற தடுப்பு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அங்கு சிறைவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சாத்தியமற்றதாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இவ்விவகாரத்தில் தலையிடுமாறு பணியிட ஒழுங்கினைக் கண்காணிக்கும் ஆஸ்திரேலிய அரசத் துறையான ‘Comcare’யை ஆஸ்திரேலிய வழங்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நெரிசல்மிக்க குடியேற்ற தடுப்பு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியமற்றதாக உள்ளதால், இம்மையங்கள் ஆஸ்திரேலிய சுகாதார மற்றும் பாதுகாப்பு(Health and Safety) சட்டங்களை மீறுபவையாக உள்ளன என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்பட்டு ...

Read More »

யாழில் சிங்கள மாணவன் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணத்தில் இரு மாணவர்கள் மத்தியிலான மோதலை தடுக்க முயன்ற சிங்கள மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள தனியார் வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்த இரு தமிழ் மாணவர்கள் தங்களுக்குடையில் மோதிக்கொண்டவேளை அதனை தடுக்க முயன்ற சிங்களமாணவன் கத்திக்குத்து இலக்காகியுள்ளார். இரு மாணவர்கள் மோதிக்கொண்டவேளை ஒரு மாணவன் மற்றைய மாணவனை கத்தியால் குத்த முயன்றதாகவும் இதனைபார்த்த சிங்களமாணவன் குறுக்கே பாய்ந்து தடுக்க முற்பட்டவேளை கழுத்தில் காயமடைந்தான் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த மாணவன் ...

Read More »

20 நிமிடங்களில் கொரோனாத் தொற்றுப் பரிசோதனை -அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

கொரோனாத் தொற்றை 20 நிமிடங்களில், உறுதி செய்யும் பரிசோதனையை அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெல்பேர்ன் நகரில் உள்ள Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் செயற்பாட்டின் மூலம் கொரோனாத் தொற்றை உறுதி செய்யும் வழிமுறையை கண்டறிந்துள்ளனர். ஒரு துளி இரத்தத்தில், மேற்கொள்ளப்படும் இப் பரிசோதனை மூலம், தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது மட்டுமின்றி, இதற்கு முன் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபரா என்பதையும் கண்டறிய முடியும் என அந் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

கொரோனா வைரஸ் நோயாளிகள் குறித்த உண்மையை அரசாங்கம் மறைக்கின்றது

கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் மறைக்கின்றது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அரசாங்கம் வாக்குவேட்டைக்காக பயன்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் நோக்கம் காரணமாக விஞ்ஞானம் புறக்கணிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இதுவே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமாகயிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல்நோக்கங்கள் விஞ்ஞானத்தை ஆதிக்கம் செய்கின்றனஎன பிமல்ரட்நாயக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வுகூடத்தினால் ...

Read More »