யாழில் சிங்கள மாணவன் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணத்தில் இரு மாணவர்கள் மத்தியிலான மோதலை தடுக்க முயன்ற சிங்கள மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

யாழ் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகில் உள்ள தனியார் வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட வீட்டில் தங்கியிருந்த இரு தமிழ் மாணவர்கள் தங்களுக்குடையில் மோதிக்கொண்டவேளை அதனை தடுக்க முயன்ற சிங்களமாணவன் கத்திக்குத்து இலக்காகியுள்ளார்.

இரு மாணவர்கள் மோதிக்கொண்டவேளை ஒரு மாணவன் மற்றைய மாணவனை கத்தியால் குத்த முயன்றதாகவும் இதனைபார்த்த சிங்களமாணவன் குறுக்கே பாய்ந்து தடுக்க முற்பட்டவேளை கழுத்தில் காயமடைந்தான் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.