Tag Archives: ஆசிரியர்தெரிவு

கோண்டாவில் வீட்டில் புகுந்து வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்!

கோண்டாவில் அந்நங்கைப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே வன்முறையில் ஈடுபட்டது. குறித்த நால்வரும் தமது முகங்களை மூடி கட்டி இருந்தார்கள் என வீட்டிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.   வீட்டினுள் புகுந்து வன்முறை கும்பல் அடாவடியில் ஈடுபட்டிருந்த ...

Read More »

மாவை சேனாதிராஜா முன்பாக தொண்டர் தற்கொலை முயற்சி!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த சுமார் 800 வரையான சுகாதார தொண்டர்கள் நியமனம் வழங்கவிருந்த மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட  ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது ...

Read More »

சிரியா போரில் குடும்பத்தினரை இழந்தானா இந்த சிறுவன்?

சிரியா போரில் குடும்பத்தினரை இழந்து, அண்டை நாட்டுக்கு சிறுவன் ஒருவன் இடம்பெயர்ந்ததாக பரவி வரும் புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம். சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர். போர் காரணமாக ஏராளமான மக்கள் அந்நாட்டை ...

Read More »

அமெரிக்காவில் லசந்த மகள் மனு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தடுத்து நிறுத்துவதற்கான கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளிற்கு எதிராக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கடந்த வாரம் கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவின் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்படலாம்,பரப்புரை செய்யப்படலாம் ஊதிப்பெருப்பிக்கப்படலாம் என கோத்தபாய ராஜபக்சவி;ன் சட்டத்தரணிகள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர். இலங்கையின் தேர்தலில் நீதிமன்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் முடிவுகளை ...

Read More »

குடும்பத்தவர்கள் ஐவரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அலபாமாவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்ப உறுப்பினர்கள் ஐவரை சுட்டுக்கொன்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளான். அலபாமாவின் எல்க்மொன்டில் உள்ள தனது வீட்டில் இந்த கொலைகளை செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான். தந்தை சிற்றன்னை மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்றதாக சிறுவன் தெரிவித்துள்ளான். துப்பாக்கி பிரயோகம் அமெரிக்க நேரடிப்படி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அவசரசேவை காவல்துறையினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சிறுவன் தனது வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும் தான் கீழ் தளத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளான். காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்றவேளையும் சிறுவன் இதனை தெரிவித்துள்ளான். வீட்டில் ...

Read More »

தெரிவுக்குழுவிடம் சாட்சியமளிக்க மைத்திரி இணக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு சிறிலங்கா   ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுப்பதுடன், ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவுக்குழு மூலமாக தெரிய வருகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தொடர்ச்சியாக பல தரப்பினரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ள நிலையில் இறுதியாக ஜனாதிபதியை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறும் அழைப்பு ...

Read More »

தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா!

ஏபிசி தமிழில் – ரஜீபன் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது தருணிகாவே இந்த விவகாரத்தில் முக்கியமானவராக ...

Read More »

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம்

ஓல்டு டிராபோர்டில் நாளை தொடங்கும் ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹெட்டிங்லேயில் 359 ரன்கள் வெற்றி இலக்கை இங்கிலாந்து விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 4-வது டெஸ்ட் நாளை ஓல்டு டிராபோர்டில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டு ...

Read More »

கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி!

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் உடைமைகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. குறித்த சந்தேக நபர்கள் 4  மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தைக் கறுத்தத் துணியால் கட்டியவாறு வீட்டுக்குள் நுழைந்தது. குறித்த சந்தேக நபர்களின் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டன. வீட்டுக்குள் புகுந்து தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த உடைமைகளை நாசமாக்கினர். வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்ற தாக காவல் துறையினர்  ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ் குடும்பத்தை நாடுகடத்துவதில் பீற்றர் டட்டன் விடாப்பிடி!

இலங்­கைக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்­து­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து, அவுஸ்­தி ரே­லி­யாவின் பல்­வேறு நக­ரங்­க­ளிலும் நேற்­று­முன்­தினம் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.   நடே­ச­லிங்கம் – பிரியா தம்­ப­திகள் மற்றும் அவர்­களின் 4 வய­துக்­குட்­பட்ட இரண்டு குழந்­தை­களை நாடு­க­டத்­து­வதில் அவுஸ்­ரே­லிய அரசு விடாப்­பி­டி­யாக உள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை தனி விமா­னத்தில் ஏற்­றப்­பட்ட இந்தக் குடும்­பத்­தி­னரை, இலங்­கைக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. விமானம் புறப்­பட்ட பின்னர் நீதி­பதி ஒருவர் தொலை­பேசி மூலம் பிறப்­பித்த உத்­த­ர­வினால் அந்த விமானம் மீண்டும் டார்­வி­னுக்குத் திருப்­பப்­பட்­டது. இதை­ய­டுத்து, அந்த தமிழ் ...

Read More »