குடும்பத்தவர்கள் ஐவரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

அமெரிக்காவின் அலபாமாவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்ப உறுப்பினர்கள் ஐவரை சுட்டுக்கொன்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளான்.

அலபாமாவின் எல்க்மொன்டில் உள்ள தனது வீட்டில் இந்த கொலைகளை செய்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

தந்தை சிற்றன்னை மற்றும் சகோதரர்களை சுட்டுக்கொன்றதாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

துப்பாக்கி பிரயோகம் அமெரிக்க நேரடிப்படி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அவசரசேவை காவல்துறையினரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட சிறுவன் தனது வீட்டில் துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும் தான் கீழ் தளத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்றவேளையும் சிறுவன் இதனை தெரிவித்துள்ளான்.

வீட்டில் மூன்று இறந்த நிலையில் காணப்பட்டனர் மூவர் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் இறந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனினும் சிறுவன் பின்னர் நடந்ததை ஏற்றுக்கொண்டுள்ளான்.

சிறுவன் பின்னர் துப்பாக்கி வீசப்பட்டிருந்த இடத்தை காண்பித்தான் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.